மூளையில் ஆபரேசன்... ஹாயாக புல்லாங்குழல் வாசித்தபடி படுத்திருந்த நோயாளி!
அமெரிக்காவில் மூளை ஆபரேசன் நடந்த போது புல்லாங்குழல் வாசித்துள்ளார் வயதான பெண் ஒருவர்.
Recommended Video

நியூயார்க்: அமெரிக்காவில் மூளையில் ஆபரேசன் நடந்தபோது, புல்லாங்குழல் வாசித்து மருத்துவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் 63 வயது பாட்டி ஒருவர்.
அமெரிக்காவின் டெக்காஸ் பகுதியைச் சேர்ந்தவர் அன்னா ஹென்றி ( 63). புல்லாங்குழல் இசைக்கலைஞரான இவருக்கு மூளையில் கட்டி உண்டானது. அன்னாவைச் சோதித்த மருத்துவர்கள், அறுவைச் சிகிச்சை செய்தால் மட்டுமே அவர் உயிர் பிழைக்க வாய்ப்பு எனக் கூறிவிட்டனர்.

எனவே, ஹுஸ்டனில் உள்ள ஹெர்மான்-எடக்சாஸ் மெடிகல் சென்டரில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அப்போது, படுக்கையில் படுத்தபடி அன்னா புல்லாங்குழல் வாசித்தபடி இருந்தார். இது அங்கிருந்த மருத்துவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
மூளையில் இது போன்ற சிக்கலான அறுவைச் சிகிச்சைகள் செய்யப்படும் போது, நோயாளியை ஆழ்ந்த தியான நிலைக்கு கொண்டு செல்ல இதுபோன்ற செயல்களில் ஈடுபட வைப்பது வழக்கம்.
ஆனால், 63 வயதான அன்னா, ஒருபுறம் மருத்துவர்கள் மூளையில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டிருந்தபோது, தடுமாற்றம் ஏதுமின்றி கைகளில் புல்லாங்குழலை பிடித்து இசைத்தபடி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான வீடியோ யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications