கருவை கலைத்து அதை கைவிட்ட காதலனுக்கு பார்சலாக அனுப்பிய இளம்பெண்
பாங்காக்: தாய்லாந்தில் 21 வயது பெண் ஒருவர் 28 வார கருவை கலைத்து அதை ஒரு அட்டைப்பெட்டியில் வைத்து தன்னை கைவிட்ட காதலனுக்கு பரிசாக அளித்துள்ளார்.
தாய்லாந்தில் உள்ள சம்ரோங் நுவா மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேவ்(21). அவர் அதே மாவட்டத்தைச் சேர்ந்த 25 வாலிபர் ஒருவரை காதலித்துள்ளார். இந்நிலையில் வேவ் கர்ப்பமாகியுள்ளார். காதலி கர்ப்பமானது பற்றி அறிந்த அந்த வாலிபர் வேறு ஒரு பெண்ணிடம் சென்றுவிட்டார்.

இது குறித்து அறிந்த வேவ் அந்த வாலிபரை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கெஞ்சியுள்ளார். ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து வேவ் 28 வார கருவை கலைத்துவிட்டார். கலைத்த கருவை ஒரு துணியில் சுற்றி அட்டைப் பெட்டியில் வைத்து காதலனின் வீட்டிற்கு எடுத்துச் சென்றார்.
அவர் அந்த பெட்டியை தனது காதலனின் சகோதரியிடம் அளித்து அவரிடம் கொடுத்துவிடுங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து டாக்சியில் கிளம்பிச் சென்றுவிட்டார். பெட்டியை பிரித்துப் பார்த்த காதலன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் வேவை தேடி வருகிறார்கள். காதலனின் பொறுப்பில்லாத்தனத்தை அவருக்கு நினைவூட்ட இவ்வாறு செய்ததாக வேவ் கடிதம் ஒன்றை எழுதி அந்த அட்டைப்பெட்டியில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications