For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெற்ற மகனை கொன்று வீசிய தாய் – 11 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்த நீதிமன்றம்!

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்தில் பெற்ற மகனையே கொலை செய்த தாய் ஒருவருக்கு 11 ஆண்டுகால சிறைதண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் நகரை சேர்ந்தவர் ரோஸ் தீப் அதியோகா. இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.

இவருக்கு 3 வயதில் மிகாயில் குலார் என்ற மகன் இருந்து வந்தார்.

கண்மூடித்தனமான உதை:

சம்பவத்தன்று இவர் தனது மகன் மிகாயில் குலாரை கண்மூடித்தனமாக அடித்து உதைத்துள்ளார்.

40 இடங்களில் காயம்:

அதில் அவனது இடுப்பு, முதுகு, நாடி, முகம், கன்னம், தலை உள்ளிட்ட 40 இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. எனவே, அவன் பரிதாபமாக இறந்தான்.

புதரில் வீசிய தாய்:

அவனது பிணத்தை ஒரு சூட்கேசில் வைத்து அடைத்தார். பின்னர் அதை காரில் 20 கிலோ மீட்டர் தூரம் எடுத்து சென்று கிர்க்கால்டி என்ற இடத்தில் உள்ள தனது தங்கையின் வீட்டின் பின்புறம் புதரில் வீசினார்.

காணவில்லை என நாடகம்:

தனது மகன் மிகாயில் குலாரை காணவில்லை என நாடகமாடினார். ஆனால் அவனது உடலை கண்டு பிடித்த போலீசார் விசாரணையில் தாயார் ரோஸ்திப் அதியோகா கொலை செய்ததை கண்டுபிடித்தனர்.

11 ஆண்டுகள் சிறை:

எனவே, அதியோகாவை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி வார்டு கிளென்னி அவருக்கு 11 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

English summary
A woman who killed her three-year-old son and hid his body in a suitcase has been jailed for 11 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X