அல் அய்னில் நாளை உலக நீரிழிவு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி.. அனைவரும் வாரீர்!
அல் அய்ன் : அல் அய்ன் இந்திய சமூக மையத்தில் உலக நீரிழிவு தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி வரும் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு நடக்கிறது.
அல் அய்ன் இந்திய சமூக மையம் அல் அய்ன் பகுதியில் வசித்து வரும் இந்தியர்களுக்கு தேவையான பல்வேறு பணிகளை செய்து வருகிறது. குறிப்பாக இந்தியர்கள் எதிர்பாராத வகையில் மரணமடைந் தால் அவர்களது உடலுக்கு இறுதிச் சடங்கு செய்வது, சொந் த ஊருக்கு அனுப்பி வைப்பது, பாஸ்போர்ட் உள்ளிட்ட தூதரக சேவைகள், ஆலோசனைகள், பணிப்பெண்களது பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக உலக நீரிழிவு தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இது குறித்து அல் அய்ன் இந்திய சமூக நல மையத்தின் தலைவர் கீழக்கரை முபாரக் முஸ்தபா கூறியதாவது : அல் அய்ன் இந்திய சமூக நல மைய வளாகத்தில் உலக நீரிழிவு தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி வரும் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு நடக்கிறது.
பொதுமக்கள் மத்தியில் நீரிழிவு தொடர்பான பாதிப்பு அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்கமாக விழிப்புணர்வு நடைப்பயிற்சி மேற்கொள்ளப்படும். அதனைத் தொடர்ந்து நீரிழிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் உரைகளை அல் வகார் மருத்துவ மையத்தின் டாக்டர் சாகுல் ஹமீது, டாக்டர் ஜேக்கப் தாமஸ் ஆகியோர் வழங்க இருக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் தேசிய அவசர சேவை மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி நான்கு நாட்களுக்குள் கொரோனா பிசிஆர் பரிசோதனை செய்த முடிவுகள் அல் ஹொசன் செயலியில் வைத்திருக்க வேண்டும். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.