உலகின் மிகப்பெரிய விமானம் சோதனை ஓட்டத்தின்போது தரையில் விழுந்து விபத்து

Subscribe to Oneindia Tamil

லண்டன்: உலகின் மிகப்பெரிய விமானம் இரண்டாவது சோதனை ஓட்டத்தின் போது திடீரென தரையில் மோதி விழுந்து விபத்திற்குள்ளானது.

இங்கிலாந்தின் ஹை பெர்ட் ஏர் வைக்கிள்ஸ் என்ற விமான தயாரிப்பு நிறுவனம் ஏர்லான்டர் -10 என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய விமானத்தை வடிவமைத்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த விமானத்தை தயாரிக்கும் பணியில் என்ஜினியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

World Largest Aircraft Crashes

மொத்தம் நான்கு என்ஜின்கள் கொண்ட இந்த விமானம் 302 அடி நீளமும், 143 அடி அகலமும், 85 அடி உயரமும் கொண்டது. ஹீலியம் வாயு மூலம் இயங்கக்கூடியது. மற்ற விமானங்கள் எழுப்பும் சத்தத்தை விட மிகவும் குறைவான ஒசை எழுப்பும் திறன் கொண்டது.

இந்த விமானத்தின் சோதனை முதல் சோதனை ஓட்டம் கடந்த வாரம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்நிலையில் இங்கிலாந்தின் பெட்போர்ட்ஷையர் கவுண்டியில் இருந்து மீண்டும் சோதனை ஓட்டம் நடந்தது. அப்போது வானில் உயரே புறப்பட வேண்டிய நிலையில், விமானத்தின் முன்பாகம் திடீரென தரையில் மோதி விழுந்து விபத்திற்குள்ளானது.

இது குறுித்து பி.பி.சி. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், விமானம் தரையில் மோதியதில் அதிஷ்டவசமாக அதில் பயணம் செய்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. முன்னதாக திட்டமிட்டபடி புறப்பட வேண்டிய நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 90 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது. எனினும் விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+