எகிறும் தொற்று.. இதுவரை 6,362,197 பேர் உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலி.. 555,013,578 பேர் பாதிப்பு
கொரோனா தொற்றில் அமெரிக்கா முதலிடம், இந்தியா 2வது, பிரேசில் 3வது இடத்திலும் உள்ளன
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.62 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஒவ்வொரு உலக நாடுகளும் மும்முரமாகி வருகின்றன.
இந்த 3 வருடமாகவே நம்மை உலுக்கி எடுக்கும் வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.62 லட்சத்தை தாண்டிவிட்டது.
இந்த தொற்றானது, பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,362,197 பேரை தாக்கி கொன்றுள்ளது.. இன்றைய தினம், உலகம் முழுவதும் கொரோனாவால் 555,013,578 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 529,800,216 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 18,851,165 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா அதிகரித்தாலும்.. மக்களிடம் பயம் இல்லை.. 4வது அலை வரவில்லை? நிபுணர்கள் கருத்து இதோ
முதல் நாடு அமெரிக்கா
இந்த கொடூர வைரஸுக்கு எந்தவிதமான மருந்தும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.. அந்த வகையில், உலக நாடுகள் அனைத்துமே தடுப்பூசிகளை கையில் எடுத்துள்ளன.. அமெரிக்காவில் 89,567,321 பேர் கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 13,317 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1,043,372 பேர் இதுவரை அமெரிக்காவில் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.. நேற்று மட்டும் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.. இதுவரை 85,286,101 பேர் குணமடைந்து சென்றுவிட்டனர்.
மரணம் இல்லை
இந்தியாவை பொறுத்தவரை, மத்திய அரசு எத்தனையோ தடுப்பு மற்றும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து கொண்டுதான் வருகிறது.. 43,532,788 பேர் இதுவரை கொரோனாவைரஸ் தொற்றுக்கு நம் நாட்டில் பாதிப்படைந்துள்ளனர்.. 14,224 பேர் நேற்று மட்டும் ஒரே நாளில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இதுவரை 525,223 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கடந்த சில தினங்களாகவே தொற்றால் யாருமே உயிரிழக்கவில்லை.. இதுவரை 42,879,477 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
சென்னை - தமிழகம்
இதில், தமிழ்நாடு நிலைமை கவலையை தர ஆரம்பித்துள்ளது.. கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,85,429 க அதிகரித்து இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 2,654 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் யாரும் இன்று உயிரிழக்கவில்லை. சென்னையில் ஒரே நாளில் 1,066 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,026 ஆகவே தொடர்கிறது. சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 15,616 ஆக அதிகரித்து இருக்கிறது. 1,542 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
சோதனைகள் அதிகரிப்பு
இந்த தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை.. வைரஸின் தீவிரத்தின் தாக்கத்தையும், அதன் வீரியம் மற்றும் பாதிப்பையும் குறைக்க தடுப்பூசி பாதுகாப்பாக கருதப்படுகிறது.. அந்த வகையில், இந்தியாவில் ஏற்கெனவே பல கோடிக்கணக்கான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது... தற்போதும் அந்த பணி தொடர்ந்து நடந்து வருகிறது.. ஆனாலும், இந்த வருட தொடக்கத்தில் இருந்தே, 15-18 வயதிற்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.. அதேபோல் சோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.,
வைரஸ்
தொற்று துவங்கியது முதலே, இப்போது வரை தொற்று பாதிப்பில் உலகில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ள நிலையில், இந்தியா 2 இடத்திலேயே பாதிப்பில் நீடித்து வருகிறது.. 3வதாக, பிரேசில் நாடு பாதிப்படைந்த நாடுகளாக இப்போதும் வருகின்றன.. இந்த நாட்டில் 32,536,302 பேர் இதுவரை அங்கு வைரஸுக்கு பாதிப்படைந்துள்ளனர்.. 33,833 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.. இதுவரை 672,101 பேர் அந்த நாட்டில் உயிரிழந்துள்ளனர்.. 84 பேர் நேற்று ஒரே நாளில் இறந்துள்ளனர்.. 30,967,114 பேர் இதுவரை குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளனர்.