சரித்திரம் படைத்த ஜி ஜின்பிங்.. மூன்றாவது முறையாக சீன அதிபராக தேர்வு! உச்சத்தில் செல்வாக்கு
பெஜ்யிங்: சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நிறைவடைந்து உள்ள நிலையில், இதன் பின்னர் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளது.
சீனாவில் நம்மைப் போல மக்களாட்சி இல்லை. அங்கு ஒற்றை ஆட்சி முறையே உள்ளதால் எதிர்க்கட்சிகளும் இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தே அதிபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இதற்காக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடைபெறும். அதில் தான் சீன அதிபர்கள் முறையாகத் தேர்வு செய்யப்படுவார்கள்
ஜெயில், அவமானம், விரட்டியடிப்பு.. காயங்களை புறந்தள்ளி நாட்டையே பிடித்த கதை! யார் இந்த ஜி ஜின்பிங்
சீனா
அதன்படி இந்தாண்டிற்கான மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. மொத்தம் 6 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாடு நேற்றுடன் நிறைவடைந்தது. சீனாவில் நடக்கும் மிகவும் முக்கியமான அரசியல் நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. நேற்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் பெரும்பாலும் ஜி ஜின்பிங் ஆதரவாளர்களே இருக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது.
ஜி ஜின்பிங்
இதையடுத்து ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக அதிபராகத் தேர்வு செய்யப்பட்டது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. சீனாவின் தந்தை என்று அழைக்கப்படும் மாவோவுக்கு பின் அங்குச் செல்வாக்கு மிக்க தலைவராக ஜி ஜின்பிங் தன்னை தானே நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். அவர் மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஆகியுள்ளார். பல ஆண்டுகளாகக் கட்சிக்கு முதல் இடம் என்ற நிலையில் இருந்து சீன ஒற்றை நபரை நோக்கிச் செல்ல தொடங்குவதை இது காட்டுகிறது.
என்ன நடந்தது
கம்யூனிஸ்ட் மாநாட்டின் இறுதியில் 200 பேரைக் கொண்ட சென்டிரல் கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. அவர்கள் சீன அரசியலில் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பான ஸ்டாண்டிங் கமிட்டியை தேர்வு செய்தனர். இதன் தலைவராகவே ஜி ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இந்த ஸ்டாண்டிங் கமிட்டி மற்றும் சென்டிரல் கமிட்டி என இரண்டிலுமே தனது ஆதரவாளர்கள் அதிகம் இருக்கும்படி ஜி ஜின் பிங் பார்த்துக் கொண்டார்.
எதிர்ப்பாளர்கள் இல்லை
கடந்த 2012 சீன அதிபர் ஜி ஜின்பிங் முதல்முறையாக அதிபரானார். அப்போது முதலே அதிபர் பதவியில் தொடரவே காய்களை நகர்த்தினார். ஊழல் ஒழிப்பு என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்து எதிர்ப்பாளர்களைக் கட்சியில் இருந்தே நீக்கினார். அதேபோல ஒருவர் இரு முறைக்கு மேல் அதிபர் பதவியில் இருக்க முடியாது என்ற விதிமுறைகளையும் 2018இல் அவர் சத்தமில்லாமல் நீக்கினார். இதன் மூலம் சாகும் வரை அதிபர் பதவியில் இருக்கவும் அவர் திட்டமிட்டு உள்ளார்.
உலகிற்குச் சீனா தேவை
மூன்றாவது முறையாக அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட பின் பேசிய ஜி ஜின்பிங், "உலக நாடுகள் இல்லாமல் சீனாவால் வளர்ச்சி அடைய முடியாது. அதேபோல உலகிற்கும் சீனா தேவை.. 40 ஆண்டுகளுக்கும் மேலாக எடுக்கப்பட்ட நடவடிக்கையால் விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் நீண்ட கால சமூக ஸ்திரத்தன்மை அடைந்து உள்ளது. எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவோம்" என்றார்.
எதிர்ப்பாளர்கள் இல்லை
சீனாவில் மாவோவுக்கு பின் யாரும் இந்த அளவுக்குச் செல்வாக்கு மிக்க தலைவராக உருவெடுத்தது இல்லை. கடந்த 2012 சீன அதிபர் ஜி ஜின்பிங் முதல்முறையாக அதிபரானார். அப்போது முதலே அதிபர் பதவியில் தொடரவே காய்களை நகர்த்தினார். ஊழல் ஒழிப்பு என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்து எதிர்ப்பாளர்களைக் கட்சியில் இருந்தே நீக்கினார்.
அடுத்து என்ன
அதேபோல ஒருவர் இரு முறைக்கு மேல் அதிபர் பதவியில் இருக்க முடியாது என்ற விதிமுறைகளையும் 2018இல் அவர் சத்தமில்லாமல் நீக்கினார். இதன் மூலம் சாகும் வரை அதிபர் பதவியில் இருக்கவும் அவர் திட்டமிட்டு உள்ளார். இதற்கு சட்டப்படி தேவையான மாற்றங்களை அவர் மிக விரைவில் செய்யத் தொடங்குவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.