இந்தியாவுக்கு எமனாகும் அரபு நாடு? எங்களை இனி தாக்கினால் சவுதி அரேபியா வரும் - அறிவித்த பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: சவுதி அரேபியா - பாகிஸ்தான் இடையே கையெழுத்தான பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி இனி இந்தியா தாக்கும்போது பாகிஸ்தானுக்கு, சவுதி அரேபியா உதவுமா? என்ற கேள்விக்கு பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் பதிலளித்துள்ளார். ‛‛ஆம், கண்டிப்பாக.. இந்தியா எங்களை தாக்கினால் சவுதி அரேபியா உதவிக்கு வரும்'' என்று கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சவுதி அரேபியாவுக்கு சென்றார். சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் அந்த நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து பேசினார். அப்போது இருநாடுகள் இடையே பரஸ்பர பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்படி பாகிஸ்தான் மீதான எந்தவொரு தாக்குதலும் சவுதி அரேபியா தன் மீதான தாக்குதலாக எடுத்து கொள்ளும். அதேபோல் சவுதி அரேபியா மீதான எந்தவொரு தாக்குதலையும், பாகிஸ்தான் தன் மீதான தாக்குதலாக எடுத்து கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதுமட்டுமின்றி பாகிஸ்தான் மீது யாராவது தாக்குதல் நடத்தினால் சவுதி அரேபியா பதிலடி கொடுக்கும். சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும். அதேபோல் சவுதி அரேபியாவுக்கு தேவையான அணுஆயுதங்களையும் பாகிஸ்தான் வழங்கும். இந்த ஒப்பந்தம் தான் பேசும் பொருளாகி உள்ளது.
இதனால் பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலுக்கு நாம் பதிலடி கொடுக்கும்போது சவுதி அரேபியா அந்த நாட்டுக்கு உதவும் என்று கூறப்படுகிறது. சவுதி அரேபியா நம்முடன் நல்ல நட்பில் உள்ளது. இதனால் சவுதி அரேபியா, நமக்கு எதிராக பாகிஸ்தானுக்கு உதவுமா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி பாகிஸ்தான் ராணுவ துறை அமைச்சர் கவாஜா ஆசிப் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஜியோ சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது கவஜா ஆசிப் கூறுகையில், ‛‛பாகிஸ்தானை இனி இந்தியா தாக்கினால் அந்த விவகாரத்தில் சவுதி அரேபியா தலையீடுமா? '' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர், ‛‛ஆம், கண்டிப்பாக.. இதில் எந்த சந்தேகமும் வேண்டும். இந்த ஒப்பந்தத்தின்படி சவுதி அரேபியா அல்லது பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால் எங்களின் இருநாடுகளும் சேர்ந்து செயல்படுவோம்'' என்றார். பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப்பின் இந்த பேட்டி நம் நாட்டுக்கு பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications