துபாயில் கடவுளின் செல்லப் பிள்ளைகளுக்கான யோகா பயிற்சி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் இந்திய கன்சுலேட்டில் சிறப்புக் குழந்தைகளுக்கான யோகா பயிற்சி வகுப்பு 31.05.2014 அன்று மாலை நடைபெற்றது.

யோகா பயிற்சி வகுப்பிற்கு சமூக சேவகர் கே.குமார் தலைமை தாங்கினார்.
யோகா பயிற்சி வகுப்பினை சமூக சேவகியும், டிடிஎஸ் இவெண்ட்ஸ் இயக்குநருமான ஜெயந்தி மாலா சுரேஷ் துவக்கி வைத்தார். ஜெயா டிவியின் பேச்சாளர் மஹேஷ் ஐயர் யோகா பயிற்சியினை வழங்கினார். மலேசியா, அமீரகம், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சியினை வழங்கி வரும் மகேஷ் ஐயர் சிறப்புக் குழந்தைகளுக்கு யோகா பயிற்சிகளை வழங்கினார்.

பயிற்சி வகுப்பில் சிறப்புக் குழந்தைகள் பலர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications