நீங்க எல்லாம் சாகப் போகிறீர்கள்: லாஸ் வேகாஸ் தாக்குதலுக்கு 45 நிமிடங்களுக்கு முன்பு எச்சரித்த பெண்
Recommended Video

லாஸ் வேகாஸ்: லாஸ் வேகாஸ் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடப்பதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பு நீங்கள் எல்லோரும் சாகப் போகிறீர்கள் என்று ஒரு பெண் எச்சரித்தது தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த இசை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அருகில் இருக்கும் ஹோட்டல் அறையில் இருந்து ஸ்டீபன் பாடக் என்பவர் சுட்டதில் 58 பேர் பலியாகினர், 500 பேர் காயம் அடைந்தனர்.
போலீசார் தனது அறைக்கு வரும் முன்பு ஸ்டீபன் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
|
எச்சரிக்கை
துப்பாக்கிச்சூடு சம்பவம் நடப்பதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பே நீங்கள் எல்லோரும் சாகப் போகிறீர்கள் என்று ஒரு பெண் எச்சரித்ததாக இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பெண்
தாக்குதல் பற்றி எச்சரித்த பெண் இசை நிகழ்ச்சி நடந்த இடத்தில் இருந்து வெளியேறி தனது ஹோட்டல் அறைக்கு சென்றதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

யார்?
தாக்குதல் பற்றி எச்சரித்த அந்த பெண் ஸ்டீபன் பாடக்குடன் லாஸ் வேகாஸ் வந்த மரிலூ டான்லியாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த பெண் டான்லி இல்லை என்று அவரை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையே டான்லி நாட்டை விட்டு வெளியேறிவிட்டாராம்.

ஏன்?
தீவிரவாத தாக்குதல் நடக்கும் என்று ஆளாளுக்கு விளையாட்டாக கூறி வருவது அதிகரித்துள்ள நிலையில் ஒரு பெண் தெரிவித்தது போன்றே கொடூரமாக தாக்குதல் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications