சவுதியில் கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட வாலிபரின் தலை துண்டிப்பு
ரியாத்: சவுதி அரேபியாவில், கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட வாலிபருக்கு தலையைத் துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது.
சவுதி அரேபியா நாட்டில் கொலை, போதை மருந்து கடத்தல் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சவுதி அரேபியாவில் வாழும் சலீம் அல் ஜிகாதி என்ற பழங்குடி சமூகத்தை சேரந்த ஒருவருக்கும், வாலிபர் ஒருவருக்கும் உண்டான தகறாரில் சலீம் உயிரிழந்து விட்டார்.
அதனைத் தொடர்ந்து சலீமைக் கொலை செய்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்ததையடுத்து, அவரது தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
கடுமையான தண்டனைகளைக் கொண்ட சவுதி அரேபியாவில் இந்த ஆண்டு இதுவரை மட்டும் 10 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு 78 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications