அடுத்தது நீங்கள்தான்.. சவுதி அரேபியாவுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வீடியோவில் மிரட்டல்
ரியாத்: சவுதி அரேபியாவில் தாக்குதல் நடத்தப்படும் என்று, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல்விடுத்துள்ளதால் அந்த நாட்டில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரான் நகரில் நேற்று நடந்த தீவிரவாதிகளின் குண்டுவெடிப்பு தாக்குதலில், 17 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த நிலையில், அடுத்ததாக, சவுதி அரேபியாவிலும் தாக்குதல் நடத்தப்படும் என வீடியோ மூலம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த வீடியோ தெஹ்ரான் தாக்குதலுக்கு முன்பே எடுக்கப்பட்டது என்று உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வீடியோவில் 5 முகமூடி அணிந்த தீவிரவாவாதிகள் தோன்றி பேசுகுிறார்கள். ஈரானுக்கு பிறகு உங்களுக்கான நேரமும் வரும். உங்களை, உங்கள் இடத்திலேயே வந்து தாக்குவோம் என அவர்கள் மிரட்டல் மிரட்டல் விடுத்துள்ளனர்.
நாங்கள் யாருடைய ஏஜண்டும் இல்லை என்றும், இறைவனுக்கு கட்டுப்பாட்டு, அவருடைய உத்தரவின் பேரில் நடக்கிறோம். மதத்திற்காகவே நாங்கள் போராடுகிறோம். ஈரானுக்காகவோ, சவுதி அரேபியாவிற்காகவோ போராடவில்லை என தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சவுதி அரேபியாவில் பாதுகாப்பு பலப்பைத்தப்பட்டுள்ளது. கத்தார் நாடு தீவிரவாதத்திற்கு உதவுவதாக கூறி சவுதி உள்ளிட்ட முக்கிய அரபு நாடுகள் கத்தாருடன் தொடர்பை துண்டித்த நிலையில், இப்படியொரு மிரட்டல் வந்துள்ளதும் உளவுத்துறையால் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications