ஜிக்கா பாதிப்புள்ள நாடுகளில் பெண்கள் கருக்கலைப்பு செய்ய அனுமதிக்க வேண்டும்: ஐ.நா.
ஜெனிவா: ஜிக்கா வைரஸ் பரவும் நாடுகளில் வசிக்கும் பெண்கள் கருத்தடை சாதனங்களை பயன்படுத்தவும், கருவை கலைக்கவும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
தென் அமெரிக்க நாடுகளில் ஜிக்கா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கர்ப்பிணிகளை வைரஸ் தாக்கினால் கருவில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டு அது சிறிய தலையுடன் பிறக்கிறது. இதனால் ஜிக்கா வைரஸ் பரவும் நாடுகளில் உள்ள பெண்கள் கருத்தரிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜிக்கா வைரஸ் பரவும் நாடுகளில் வசிக்கும் பெண்கள் கருத்தடை சாதனங்களை பயன்படுத்தவும், கருவை கலைக்கவும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐ.நா. செய்தித் தொடர்பாளர் சிசில் பாலி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஜிக்கா வைரஸ் பயத்தால் பெண்களை கருத்தரிக்க வேண்டாம் என்று தென் அமெரிக்க நாடுகள் கேட்டுக் கொண்டுள்ளன. ஆனால் பெண்கள் கருத்தரிக்காமல் இருக்கத் தேவையானதை அளிக்காமல் அவர்களை எப்படிக் கேட்டுக் கொள்ள முடியும்? என்றார்.
ஐ.நா. மனித உரிமை ஆணையர் ஜெய்த் ராத் அல் ஹுசைன் கூறுகையில்,
கருத்தடை சாதனங்கள், கருகலைப்புக்கு எதிராக உள்ள நாடுகளில் எப்படி பெண்களை கருத்தரிக்காமல் இருக்குமாறு கூற முடியும்? பாலியல் வன்முறை அதிகம் உள்ள சூழலில் வசிக்கும் பெண்களை கருத்தரிக்காமல் இருக்குமாறு அரசுகள் கூறுவது நிஜத்தை புறக்கணிப்பது ஆகும் என்றார்.
பெண்களை கருத்தரிக்க வேண்டாம் என்று அறிவுறுத்திய நாடுகளில் பலவற்றில் கருகலைப்புக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications