ஒரு சிங்கத்துடன் மூடு அவுட்! கூட்டமாக சேர்ந்து பூங்கா ஊழியரை கடித்தே கொன்ற கொடூரம்! விசிட்டர்ஸ் ஷாக்
பாங்காங்: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் முன்னிலையில், 58 வயதான பூங்கா ஊழியர் ஒருவர் சிங்கக் கூட்டத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் அவரை சிங்கங்கள் ஏன் தாக்கிக் கொன்றன என்பதை பார்க்கலாம்.
பாங்காங்கில் சஃபாரி உலக உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு சிங்கங்கள், யானை, ஓரங்குட்டன் குரங்குகள், கடல் சிங்கம் உள்ளிட்டவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 1988 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த பூங்கா 480 ஏக்கர் திறந்தவெளி பூங்காவாகவும் 180 ஏக்கர் பறவைகள் சரணாலயமாகவும் செயல்பட்டு வருகிறது.

இங்கு இரவு நேரங்களில் சிங்கங்கள் உறுமும் சப்தம் கேட்கும். பகல் நேரத்தை விட இரவு நேர பயணம், நல்ல அனுபவத்தை கொடுக்கும். ஆனால் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும். இதற்காக அந்த நாட்டு பொது போக்குவரத்து, வேன், ஜீப், டாக்ஸிகள் உள்ளன. அதில் பயணித்தபடியே விலங்குகளை காணலாம். காலை 10 மணிக்கு விலங்குகளுக்கு உணவளிப்பார்கள். அப்போது விலங்குகள் உற்சாகத்துடன் இருக்கும்.
இந்த பூங்காவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்தவர் ஜியான் ராங்காரஷாமி. இவர் சிங்கங்கள் வசிக்கும் பகுதிக்கு பாதுகாப்பு விதிகளை மீறி காரில் போய் இறங்கியுள்ளார். அப்போது அவரை சிங்கங்கள் கடுமையாக தாக்கியதாக சொல்லப்படுகிறது.
இந்த பூங்காவை பார்வையாளர்கள் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த போது ஜியானின் அலறல் சப்தம் கேட்டு சிங்கங்கள் இருக்கும் இடத்திற்கு மக்கள் சென்றனர். அப்போது ஜியானை 3 க்கும் மேற்பட்ட சிங்கங்கள் தாக்கிக் கொண்டிருந்தன. அவரால் தப்ப முடியவில்லை. அப்போது சிங்கங்களின் கவனத்தை சிதறடிக்க மக்கள் ஏதேதோ சப்தங்களையும் எழுப்பி பார்த்தனர். ஆனால் அவை அதையெல்லாம் சட்டை செய்யாமல் அவரை விடாமல் கடித்துக் கொண்டிருந்தது.
சுமார் 15 நிமிடங்கள் ஜியான் சிங்கங்களுடன் போராடினார். இதுகுறித்து பார்வையாளர்கள் கூறுகையில், ஜியான் தனது காரை விட்டு இறங்கியவுடனே அந்த சிங்கங்கள் அவரை தாக்கின. நாங்கள் அந்த சம்பவத்தை பார்த்தாலும் எப்படி அவருக்கு உதவுவது என தெரியவில்லை. நாங்கள் எங்கள் காரின் ஹாரன் சப்தத்தை அடித்தோம். கத்தி பார்த்தோம். ஆனாலும் அவரை விடவே இல்லை.
முதலில் ஜியானுடன் சிங்கங்கள் விளையாடுவதாக நினைத்தோம். பிறகு கடித்தவுடன்தான் விஷயம் தெரிந்து பூங்கா அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தார்கள் என்றனர்.
இதுகுறித்து பூங்கா ஊழியர்கள் கூறுகையில், சிங்கங்கள் பசியோடு இல்லை. அவற்றில் ஒரு சிங்கத்திற்கு நல்ல மனநிலை இல்லை என்பதால் அது முதலில் தாக்குதல் நடத்தியிருக்கலாம். அதன் பிறகு மற்ற சிங்கங்களும் தாக்குதல் சம்பவத்தில் இறங்கி இருக்கும் என்கிறார்கள்.
இந்த நிலையில் சிங்கங்களிடம் இருந்து அவரை மீட்ட அதிகாரிகள், அவரை மருத்துவமனையில் சேர்த்த போது ஜியான் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பழகிய விலங்குகள் என்றாலும் போதுமான பாதுகாப்பு விதிகள் இல்லாமல் அவற்றின் இருப்பிடம் செல்லவே கூடாது என்பது இதன் மூலம் தெரிகிறது.
இதையடுத்து பூங்காவில் உள்ள அனைத்து விலங்குகளையும் மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அவை எல்லாமே நல்ல நிலையில் இருக்கின்றன. அவற்றின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 40 ஆண்டுகால பூங்கா வரலாற்றில் இதுவரை இந்த சம்பவம் நடந்ததே இல்லை என்கிறார்கள். மேலும் பாதுகாப்பை பலப்படுத்தவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications