சூர்யாவை விடாமல் துரத்தும் வன்னியர் சங்கம்! சிதம்பரம் நீதிமன்றத்தில் பதிவான வழக்கு!
சிதம்பரம்: ஜெய்பீம் திரைப்படம் தொடர்பாக நடிகர் சூர்யா, அவரது மனைவி நடிகை ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் மற்றும் அமேசான் நிறுவனம் ஆகியவை மீது வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்கள் இழிவாக சித்தரிக்கப்பட்டுள்ளனர் என்பது வன்னியர் சங்கம் மற்றும் பாமகவினரின் குற்றச்சாட்டு. ஜெய்பீம் திரைப்படத்தில் வில்லனாக காட்டப்படுகிறவர் எஸ்.ஐ.குருமூர்த்தி.

வன்னியர் எதிர்ப்பு ஏன்?
ஆனால் உண்மைச் சம்பவத்தில் எஸ்.ஐ. பெயர் அந்தோணிசாமி. இந்த பெயர் திட்டமிட்டே மாற்றப்பட்டு குருமூர்த்தியாக மாற்றப்பட்டுள்ளது; அவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை வெளிப்படுத்தும் வகையில் வன்னியர் சங்கத்தின் அக்னி கலசம் உள்ள காலண்டரும் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என வன்னியர் சங்கம் குற்றம்சாட்டி இந்த திரைப்படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பாமகவினரும் பல இடங்களில் ஜெய்பீம் திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அன்புமணி, வன்னியர் சங்கம்
இது தொடர்பாக பாமக இளைஞரணித் தலைவரும் ராஜ்யசபா அன்புமணியும் நடிகர் சூர்யாவுக்கு கண்டனம் தெரிவித்து கடிதம் அனுப்பினார். நடிகர் சூர்யா ரூ5கோடி நஷ்ட ஈடு தரக் கோரி வன்னியர் சங்கம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது. மேலும் ஜெய்பீம் திரைப்படத்துக்கு எந்த ஒரு விருதையும் மத்திய அரசு வழங்கக் கூடாது எனவும் வன்னியர் சங்கம் கடிதம் அனுப்பி இருந்தது. இந்த நிலையில் சிதம்பரம் நீதிமன்றத்தில் ஜெய்பீம் திரைப்படம் தொடர்பாக வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி வழக்கு தொடர்ந்துள்ளார்.

நடிகர் சூர்யா, ஞானவேல்
இதற்கு நடிகர் சூர்யா விளக்கம் தந்ததுடன் அக்னி கலச காலண்டரும் திரைப்படத்தில் மாற்றி அமைக்கப்பட்டது. பின்னர் இயக்குநர் ஞானவேலும் யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன் என அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனால் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் ஜெய்பீம் சர்ச்சை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
Recommended Video

வன்னியர் சங்கம் வழக்கு
இந்த நிலையில் சிதம்பரம் நீதிமன்றத்தில் வன்னியர் சங்கத்தின் தலைவர் பு.தா.அருள்மொழி ஜெய்பீம் படம் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார். நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா, இயக்குநர் ஞானவேல், படத்தை வெளியிட்ட அமேசான் நிறுவனத்துக்கு எதிராக அருள்மொழி இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். அதில், அவதூறு பரப்பியது, இரு சமூகத்தினர் இடையே வன்முறை தூண்டுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது ஆகிய பிரிவுகளின் கீழ் நடிகர் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் மற்றும் அமேசான் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications