ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ30 கோடி நில மோசடி- வருவாய் அலுவலர், வட்டாட்சியர் உட்பட 5 பேர் கைது!
காஞ்சிபுரம் : ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம் - வடகால், பால்தல்லூர் பகுதியில் ரூ.30 கோடி மதிப்பிலான நிலமோசடி வழக்கில், மாவட்ட வருவாய் அலுவலர், இரு வட்டாட்சியர்கள், சார்பதிவாளர், நில அளவையர் உள்ளிட்ட உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் வடகால் மற்றும் பால் நல்லூர் கிராமங்களில், ஒரு தனியார் நிறுவனம் சார்பில் வினோத் நகர் என்ற பெயரில் வீட்டுமனை பிரிவுகள் அமைக்கப்பட்டது. அந்த தனியார் நிறுவனத்தின் சார்பாக அதன் பங்குதாரர், பொது உபயோகத்திற்காக சுமார் 16.64 ஏக்கர் நிலத்தை, ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கு கடந்த 1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து வழங்கினார்.

மோசடி - போலீசார் விசாரணை
இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நிலங்களை, அந்த தனியார் நிறுவனத்தின் பங்குதாரர் மோசடி செய்து விற்பனை செய்தது தெரிய வந்தது. மோசடி செய்த நிலத்தின் மதிப்பு 30 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. பொது உபயோகத்திற்காக வழங்கப்பட்ட நிலத்தை ரத்து செய்து, அதற்கு சில அரசு அதிகாரிகள் உடந்தையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
மோசடிக்கு உடந்தையாக செயல்பட்டவர்கள்
மோசடியில் ஈடுபட்ட தற்போது இந்து சமய அறநிலையத் துறையில் பணியாற்றி வரும் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், காஞ்சிபுரத்தில் நில எடுப்பு வட்டாட்சியராக பணியாற்றி வரும் வட்டாட்சியர் எழில் வளவன், ஸ்ரீபெரும்புதூர் ஆதி திராவிடர் நலத்துறை வட்டாட்சியரான பி. பார்த்தசாரதி, காஞ்சிபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இணை பதிவாளராக பணியாற்றி வரும் ராஜதுரை மற்றும் உதவியாளர் பெனடின் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் மோசடி செய்த இவர்கள் மீது காஞ்சிபுரம் மாவட்ட சிபிசிஐடி காவல்துறையினர் 11 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்கள் அனைவரையும் சிறையில் அடைத்தனர்.
உயர் பதவி வகிக்கும் அரசு அதிகாரிகள், இதுபோன்று, அரசு நிலத்தை மோசடி செய்வதற்கு உடந்தையாக செயல்பட்டு, போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications