அத்திவரதர் விழாவில் தொடரும் உயிரிழப்புகள்.. இன்று ஒரு முதியவர் பலி.. மக்கள் அதிர்ச்சி!
காஞ்சிபுரம்: அத்திவரதரை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கானேர் கூடியதால், கூட்ட நெரிசலில் சிக்கி நேற்று 4 பேர் உயிரிழந்த நிலையில், இன்று முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்திவரதர் தரிசனம் செய்து விட்டு திரும்பிய 72 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஆறுமுகம், தரிசனம் செய்து விட்டு திரும்பிய போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வரதராஜ பெருமாள் கோவிலின் தெப்பக்குளத்தில் வைக்கப்படும் அத்தி வரதர் சிலை, 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியில் எடுக்கப்பட்டு, 48 நாட்களுக்கு பூஜை செய்யப்படும். பின்னர் மீண்டும் அத்தி வரதர் சிலை நீருக்கடியில் வைக்கப்படும்.
ஜூலை 1ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த உற்வத்தின் 18வது நாளான நேற்று, கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பிரதமர் வரவுள்ளதால் பொது தரிசனம் ரத்து செய்யப்படும் என வதந்தி பரவியதாலும், வார இறுதியில், கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதாலும், நேற்று ஏராளமான பக்தர்கள், அத்திவரதரை தரிசிக்க,காஞ்சிபுரத்தில் குவிந்தனர்.
இதனால், எதிர்பாராத அளவில் கூட்டம்அலைமோதியது. கூட்டத்தில் சென்ற பலருக்கு, மூச்சுத் திணறல் ஏற்பட்டது. வயதானவர்கள் பலர் செய்வதறியாது தவித்தனர். தரிசனத்தை முடித்து திரும்பிய கூட்டத்தில், சிலர் ஆங்காங்கே மயங்கி விழுந்தனர்.
அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சென்னையை சேர்ந்த நாராயணி, ஆந்திராவை சேர்ந்த கங்காலட்சுமி ஆகிய 2 பெண்களும், சென்னையை சேர்ந்த நடராஜன் மற்றும் ஆனந்த் ஆகியோர் உயிர் இழந்தனர். இந்தநிலையில், 19 வது நாளான இன்று, அத்திவரதரை தரிசித்து விட்டு திரும்பிய முதியவர் உயிரிழந்துள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications