பஸ் நிலையத்தில் பையில் கிடந்த வெடிகுண்டு... திடீர் பரபரப்பு... காஞ்சிபுரத்தில் திக்.. திக்.. திக்!

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக தேர்தல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. அரசியல் கட்சிகள் ஒரு பக்கம் வேட்புமனு தாக்கலும், ஒரு பக்கம் தீவிர பிரசாரமும் மேற்கொண்டு வருகின்றனர்.

A Country bomb was found at the Kanchipuram bus stand

காஞ்சிபுரத்திலும் பல்வேறு அரசியல் தலைவர்கள் முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். காஞ்சிபுரம் பஸ் நிலைய நுழைவு வாயில் பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இந்த நிலையில் இன்று மாலை அந்த கடைகளுக்கு வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தாங்கள் வைத்திருந்த பையை அங்கேயே வைத்து சென்று விட்டார். நீண்ட நேரம் கழித்து அந்த பையை கடைக்காரர்கள் பார்த்தபோது அதில் வயர்கள் சுற்றப்பட்ட நிலையில் நாட்டு வெடிகுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அதனை மழைநீர் கால்வாயில் வைத்தனர். தொடர்ந்து காஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பின்னர் அங்கு வந்த போலீசார் நாட்டு வெடிகுண்டை கைப்பற்றினார்கள். தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் வந்து அந்த நாட்டு வெடிகுண்டை கைப்பற்றினார்கள். அந்த பையை வைத்து சென்றவர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+