அத்திவரதர் தரிசனம்.. முதியவர்களுக்கு பழச்சாறு வரிசையில் நிற்பவர்களுக்கு நாற்காலி.. தலைமைசெயலர்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதரை தரிசிக்க வரிசையில் நிற்பவர்கள் ஓய்வெடுக்க நாற்காலிகள் போட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தலைமைச்செயலர் சண்முகம் கூறியுள்ளார்.
சுமார் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1 முதல் நடைபெற்று வருகின்றது.ஆகஸ்ட் 17 வரை இந்த வைபவம் நடக்கிறது. இதனை காண தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அத்திவதரை தரிசிக்க வருபவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தருவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைச்செயலாளர் சண்முகம் அத்திவரதரை காண வரும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பேட்டரி வாகனங்களை முறையாக இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. மருத்துவ குழுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தளர்ச்சியுடன் வரும் முதியவர்களுக்கு பழச்சாறு வழங்கப்படும்.
பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். அத்திவரதர் உற்சவத்திற்கு பக்தர்களின் வருகை அதிகரிப்பால் கூடுதலாக கூடாரம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதே போல துப்புறவு தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் ஊர்காவல் படையை சேர்ந்த 1000 பேர் பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுவர். மேலும் முக்கிய தினங்களில் தரிசனத்தை காலை ஒரு மணி நேரம் முன்னதாக துவக்க முடியுமா என்பது பற்றியும் ஆலோசித்து வருகிறோம் என்றார்.
பின்னர் பேசிய டிஜிபி திரிபாதி அத்திவரதர் வைபவத்திற்காக 5,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் உள்ளனர். மேலும் கூடுதல் தன்னார்வலர்கள் உதவி செய்ய அழைப்பு விடுப்பதாகவும் கூறினார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications