பிக்பாஸில் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன.. சிலருக்கு தெரியவில்லை: காஞ்சியில் கமல் பொளேர்
காஞ்சிபுரம்: பிக்பாஸ் நிகழ்ச்சியில் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன; ஆனால் சிலரது கண்களுக்கு அது தெரிவதில்லை என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன்ன் சாடினார்.
தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் கமல்ஹாசன், தன்னை எம்ஜிஆரின் நீட்சி என பேசி வருகிறார். இதற்கு பதில் தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்தார்.

2-ம் கட்ட பிரசாரம்
முதல்வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என கமல்ஹாசன் பதிலடி தந்திருந்தார். இந்த நிலையில் 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை மாலை கமல்ஹாசன் தொடங்கினார்.

காஞ்சியில் பெருந்திரள் வரவேற்பு
சென்னையை தொடர்ந்து காஞ்சிபுரம் வருகை தந்த கமல்ஹாசனுக்கு பெருந்திரளாக கூடி வரவேற்பளிக்கப்பட்டது. அப்போது பேசிய கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யத்தை தொடங்கிய போது தேறமாட்டேன் என்றார்கள். இப்போது என்னை கண்டு பயப்படுகிறார்கள்.

தூக்கம் தொலைத்தவர்கள்
நான் அரசியலுக்கு வந்த பின் பலரது தூக்கமே போய்விட்டது. என் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வியப்பாக இருக்கிறது. என்னை சிலர் எதிரிகளாக நினைத்தாலும் நான் அப்படி எல்லாம் நினைப்பது இல்லை. ஏனெனில் அவர்கள் தமிழக மக்கள் முன்பாக குற்றவாளிகள்.

பிக்பாஸில் நல்ல விஷயங்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ன இருக்கிறது என்கிறார்கள். அதில் பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அது சிலரது கண்களுக்கு தெரியாது என்றார்.












Click it and Unblock the Notifications