Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அது டீ கப் தானே.. ஆக்ஸிஜன் மாஸ்க் எங்கே? உயிரோடு விளையாடிய உத்திரமேரூர் அரசு மருத்துவமனை

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிகிச்சைக்கு வந்த சிறுவனுக்கு உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் மாஸ்க்குக்கு பதிலாக டீ குடிக்க பயன்படுத்தும் பேப்பர் கப்பை வைத்து சிகிச்சை அளித்ததாக கூறப்படும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்டுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தினமும் லட்சக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனைகளில் இரவு பகல் பாராமல் உழைத்து மக்களின் உயிரை காப்பாற்றும் ஏராளமான மருத்துவர்களும், செவிலியர்களும் இருக்கவே செய்கிறார்கள். அதே சமயத்தில், ஒருசில மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியப்போக்கால் சில மோசமான சம்பவங்கள் அரங்கேறுகின்றன.

 Kanchipuram: Government Hospital gives breathless Student paper tea cup instead of Oxygen mask

அண்மையில் கூட ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது அக்குழந்தையின் கை அழுகி கடைசியில் அதை நீக்கும் நிலை வந்தது. மருத்துவர்களின் அலட்சியமே இதற்கு காரணம் என பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்தான் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றுள்ளது. மூச்சுத் திணறல் ஏற்பட்டு உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு வந்த பள்ளி மாணவனுக்கு பேப்பர் கப் மூலம் ஆக்ஸிஜன் செலுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூரில் ஒரு பள்ளி மாணவனுக்கு நேற்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அந்த மாணவனை உத்தரமேரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது அவனுக்கு நெஞ்சில் உள்ள சளியை இளக்கும் நெபுலைஸர் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த சிகிச்சைக்கு ஆக்சிஜன் மாஸ்க் தேவை. ஆனால், மருத்துவமனையில் அந்த நேரத்தில் ஆக்சிஜன் மாஸ்க் இல்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, ஆக்சிஜன் மாஸ்க்குக்கு பதிலாக டீ குடிக்க பயன்படுத்தும் கப்பை வைத்து அவருக்கு சிகிச்சை அளித்தனர். இதனைப்பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த காட்சியை வீடியோ எடுத்த ஒருவர் அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். ஊடகங்களிலும் இதுதொடர்பான வீடியோ செய்தியாக வெளியானது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதுதொடர்பான விசாரணை அறிக்கையை உயரதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசு மருத்துவமனைகளைப் பற்றியும் சுகாதாரத்துறையை பற்றியும் பலரும் பெருமையாக கூறி வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளை விட பல அரசு மருத்துவமனைகளின் சிகிச்சைகளின் தரம் சிறப்பாகவே உள்ளதாக பாரட்டும் பெற்று வருகிறது. ஒரு சில அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் இதுபோன்ற அலட்சியமான சம்பவங்களால் அனைத்து அரசு மருத்துவமனைகளும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+