வாடகை வீட்டு பெண்களிடம் துடைப்பத்திலேயே அடிவாங்கிய ஹவுஸ் ஓனர்.. காலையில்தான் கைதானார்.. இப்ப பாருங்க
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக பிரமுகர் , 2 பெண்களிடம் சேட்டை செய்ததால், இன்று கட்சியிலிருந்தே நீக்கப்பட்டார்.. அத்துடன், போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் கீழ் படப்பை பகுதியை சேர்ந்தவர் பொன்னம்பலம்.. 60 வயதாகிறது.. இவர் அதிமுகவில் எம்ஜிஆர் மன்ற இணை ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வந்தார். இவருடைய வீட்டின் மேல் மாடியை வாடகைக்கு விட்டுள்ளார்.. இதில், தனியார் தொழிற்சாலையில் பணியாற்றும் 2 இளம் பெண்கள் குடியிருந்து வந்துள்ளனர்..

பொன்னம்பலம்: பொன்னம்பலம் இந்த பெண்களை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்து வந்திருக்கிறார்.. இதனால் அதிர்ச்சியடைந்த 2 பெண்கள், இவருக்கு பயந்து, கடந்த டிசம்பர் மாதம். அந்த வீட்டையே காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு வாடகைக்கு சென்றுள்ளனர்.
ஆனாலும் பொன்னம்பலம் விடாமல், அந்த பெண்களுக்கு துரத்தி துரத்தி பாலியல் தொல்லை தந்துள்ளார்.. அந்த பெண்கள் வேலைக்கு போனாலும், வேலையிலிருந்து திரும்பி வீட்டுக்கு வரும்போதும், பைக்கிலேயே சென்று, பாலியல் டார்ச்சர் தந்து வந்துள்ளார்.. போதாக்குறைக்கு, செல்போனிலும் தொடர்பு கொண்டு பாலியல் மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால், அந்த 2 பெண்களும், பொன்னம்பலம் பற்றி தன்னுடைய தோழிகளிடம் இதை பற்றி பலமுறை சொல்லி அழுதுள்ளனர்.
பாலியல் தொந்தரவு: இப்படித்தான், இன்று விடிகாலை 5 மணிக்கு , பொன்னம்பலம் அந்தப் பெண்கள் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று, பாலியல் தொந்தரவும் தந்துள்ளார்.. இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட பெண்களும், சக தோழிகளும் சேர்ந்து பொன்னம்பலத்தை துடைப்பத்தாலேயே அடித்து விரட்டியிருக்கிறார்கள். அத்துடன், இதனை செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்தனர்.
துடைப்பத்தால் அந்த பெண்கள் அடித்ததுமே, "வயசு பொண்ணுங்க இருக்கிற ரூமுக்கு வந்தது என் தப்புதான்" என்று ஹவுஸ் ஓனர் சொல்வது முதல் அவர் வீட்டை விட்டு வெளியேறும்வரை துடைப்பத்தால் அடித்து விரட்டுவது வரை அனைத்துமே அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது.
அதிரடி கைது: மேலும், இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் மணிமங்கலம் போலீசிலும் புகார் தந்தனர்.. இதையடுத்து போலீசார் விரைந்து சென்ற பொன்னம்பலத்தை உடனடியாக ஸ்டேஷனுக்கு அழைத்துக்கொண்டு வந்தனர். பெண் வன்கொடுமை, கொலை மிரட்டல், ஆபாச வார்த்தையால் திட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர்மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். இறுதியில், பொன்னம்பலத்தை கைது செய்து சிறையிலும் அடைத்தனர்.
இதனிடையே, அதிமுக நிர்வாகியாக இருந்த பொன்னம்பலத்தை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். படப்பை பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் தந்தபடியே இருந்தது..
ஜாமீன்: இந்நிலையில், பொன்னம்பலத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வயது மூப்பு, நோய் இருப்பதாக அவரது தரப்பு வழக்கறிஞர்கள் வைத்த வாதத்தை ஏற்று அவருக்கு இந்த ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. காலையில் கைதான நிலையில், தற்போது இந்த ஜாமீன் தரப்பட்டுள்ளது.
-
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்!












Click it and Unblock the Notifications