Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓ.பன்னீர்செல்வத்தின் புரட்சி பயணத்தை புரட்டி போட்ட மழை! கலைந்து சென்ற கூட்டம்! ஆரம்பமே இப்படியா?

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் களியனூரிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் தொடங்கவிருந்த புரட்சிப் பயணத்தை மழை புரட்டி போட்டுவிட்டது.

மாலை 6.30 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான இருக்கைகள் எல்லாம் அமைக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்ல செவ்வாழைப்பழங்கள் குலை தள்ளிய நிலையில் வாழைத்தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன. கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டி ஆட்களும் வேன்களில் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

 O.Panneerselvam revolutionary journey that was to start from Kaliyanoor in Kanchipuram district

இதனிடையே கொட்டித்தீர்த்த மழையால் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தவர்கள் ஆளைவிட்டால் போதும் என கலந்து செல்ல ஆரம்பித்துவிட்டனர். மழை சற்று அதிகம் பெய்ததால் கூட்டம் திட்டமிட்டபடி நடக்குமா நடைபெறாதா என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. காஞ்சிபுரம் வரை வந்துவிட்ட ஓ.பன்னீர்செல்வம், மழையால் அப்செட் ஆகிவிட்டார்.

இந்நிலையில் புரட்சிப் பயணத்துக்கு வருண பகவானே வாழ்த்து தெரிவிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சமாளித்தாலும் கூட பல லட்சங்கள் செலவழித்தது வீணாகிவிடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டிருக்கிறது. ஆரம்பமே இப்படியானதால் எடப்பாடி பழனிசாமி அணியினர் இதனை ரசிக்கின்றனர்.

அதுமட்டுமல்ல ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல குடைச்சல்களை கொடுப்பதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மீண்டும் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+