அத்தி வரதரை தரிசிக்க போலாந்து நாட்டினருக்கு அனுமதி மறுப்பு... கடும் கெடுபிடி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்தி வரதரை தரிசிக்க வந்த போலாந்து நாட்டினருக்கு அறநிலையத்துறை அனுமதி மறுத்துள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் உற்சவத்தின், 7ஆம் நாளான இன்று, பெருமாளுக்கு மஞ்சள் பட்டு உடுத்தி, தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

விடுமுறை தினம் என்பதால், ஆந்திரா,கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. சுமார் 1,500 போலீசார், சுழற்சி அடிப்படையில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர் கூட்ட நெரிசலில் மயங்கி விழுவோருக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில், போலந்து நாட்டை சேர்ந்த 7 பேர் காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க வந்துள்ளனர். அவர்கள் காவல்துறையின் அனுமதி பெற்ற பின்னர், கோயிலுக்குள் சென்றுள்ளனர். ஆனால் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், அத்தி வரதரை தரிசிக்க அவர்களுக்கு அனுமதி இல்லை என கூறி திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் அத்திவரதரை தரிசிக்க வந்த போலாந்து நாட்டினர் 7 பேரும், மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணமாகவே உள்ளனர். ஆனால், முறையான அறிவிப்பு இன்றி, இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளின் கெடுபிடியால் பகதர்கள் அவதிக்குள்ளாவதாக புகார் எழுந்துள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications