Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கன்னியாகுமரியில் கடன் தந்த வங்கிக்கு ட்விஸ்ட் தந்த காங்கிரஸ் பெண் பிரமுகர்.. பாய்ந்த வழக்கு

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே வாங்கிய கடனை திரும்ப செலுத்தாததால் வங்கி நிர்வாகம் சார்பில் காங்கிரஸ் பெண் நிர்வாகி வீட்டிற்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்காக வீட்டை ஜப்தி செய்வதற்காக சென்ற கோர்ட்டு ஊழியரை காங்கிரஸ் பெண் பிரமுகர், அவரது கணவர் ஆகியோர் விரட்டியடித்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரின் பேரில் அந்த தம்பதி மீது புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாங்கிய கடனை திரும்ப செலுத்தாததால் வங்கி நிர்வாகம் சார்பில் ஜப்தி நோட்டீஸ் வழங்கப்படுவது வழக்கமான நடைமுறை தான். இது எப்படி நடக்கிறது. ஒரு வங்கி, கடன் வாங்கியவர் தவணையைச் செலுத்தாதபோது, SARFAESI Act (Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002) என்ற சட்டத்தின் கீழ் மேற்கொள்ளும்.

Kanyakumari

முதலில் கடன் தவணை நிலுவையில் இருக்கும்போது, வங்கி முதலில் தொலைபேசி வாயிலாகவும், குறுஞ்செய்தி வாயிலாகவும் தொடர்புகொள்ளும். இதைத் தாண்டி தாமதமாகும் போது, 'நோட்டீஸ்' அனுப்பத் தொடங்கும். கடன் கணக்கு 'வாராக்கடன்' (NPA - Non-Performing Asset) என்று வகைப்படுத்தப்பட்ட பிறகு, வங்கி சட்டப்பூர்வமாக இந்த நோட்டீஸை அனுப்பும். இதில், கடன் வாங்கியவர் நிலுவைத் தொகையை எத்தனை நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். பொதுவாக, 60 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.

இந்த நோட்டீஸ் கிடைத்த 60 நாட்களுக்குள், கடன் வாங்கியவர் நிலுவைத் தொகையைச் செலுத்தலாம். அல்லது வங்கியின் கணக்கீட்டில் ஏதேனும் தவறு இருந்தால், அதற்கு ஆட்சேபனை தெரிவித்து வங்கிக்கு பதில் கடிதம் அனுப்பலாம். (வங்கி இதைப் பரிசீலித்து 15 நாட்களுக்குள் பதில் சொல்ல வேண்டும்).
இறுதியாக கடன் வாங்கியவர் தொகையைச் செலுத்தத் தவறினால், வங்கியின் அதிகாரி சொத்தின் மீது 'சீல்' வைப்பார். அந்தச் சொத்தின் வருமானம் அல்லது அதைக் கையாளும் அதிகாரத்தை வங்கி எடுத்துக்கொள்ளும்.

சொத்து கையகப்படுத்தப்பட்ட பிறகு, வங்கி அந்தச் சொத்தை விற்றுத் தன் நிலுவைத் தொகையை மீட்கும். இதற்கு முன்பாக, பொது ஏலம் குறித்த அறிவிப்பை நாளிதழ்களில் விளம்பரம் செய்ய வேண்டும். இதுதான் நடைமுறை . கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு, கண்ணன்கரைவிளை பகுதியை சேர்ந்த 58 வயதாகும் ரசல்ராஜ் வசித்து வருகிறார். இவரது மனைவி அனிதா (53). இவர் காங்கிரஸ் கட்சியின் முன்சிறை ஒன்றிய மகளிர் அணி தலைவராக இருக்கிறார். தம்பதி இருவரும் கடந்த 2014-ம் ஆண்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் வங்கி கிளையில் தங்கள் வீட்டுடன் சேர்ந்த நிலத்தை அடமானம் வைத்து ரூ.15 லட்சம் கடன் வாங்கி தங்களுக்கு தெரிந்த நபரான ரகுதாஸ் என்பவருக்கு கொடுத்தனர்.

ஆனால் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாததால் வங்கி நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் சீப் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் முடிவில் ரசல்ராஜின் வீட்டை ஜப்தி செய்து வங்கி அதிகாரியிடம் ஒப்படைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்காக நியமிக்கப்பட்ட நீதிமன்ற காவலாளி ஒருவர் சம்பவத்தன்று கண்ணன்கரைவிளைக்கு சென்று ரசல்ராஜின் வீட்டை பூட்டி சீல் வைத்தார்.

Election 2026

இதில் ஆத்திரம் அடைந்த ரசல் ராஜும், அவரது மனைவி அனிதாவும் சேர்ந்து அவரை விரட்டியடித்து கொலை மிரட்டல் விடுத்ததோடு வீட்டின் பூட்டை உடைத்து அத்துமீறி உள்ளே சென்று கைப்பற்றியதாக சொல்லப்படுகிறது. இது குறித்து கடன் தந்த குறிப்பிட்ட வங்கி கிளையின் மேலாளர் பாஸ்கர் (46) புதுக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் தம்பதியர் மீது புதுக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்ரோஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் புதுக்கடை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+