கன்னியாகுமரியில் முதலாளி மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் போது வீடியோ எடுத்த தொழிலாளர்கள்.. ட்விஸ்ட்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே தம்பதியின் நெருக்கமான வீடியோவை அனுப்பி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக தம்பதி அளித்த புகாரின் பேரில் போலீசார் இரண்டு இளைஞர்களை விசாரிக்க முயன்ற போது, தற்போது இரண்டு பேரும் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. வேலை செய்த நிறுவனத்தின் முதலாளியை இரண்டு பேரும் மிரட்டியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே கேரள எல்லை பகுதியில் ஒரு தம்பதி சுற்றுலா மற்றும் வேன் உள்பட வாகனங்களை வாடகைக்கு விட்டு தொழில் நடத்தி வருகிறாரக்ள். இவர்களிடம் கன்னியாகுமரி மாவட்டம் மாங்கோடு வெள்ளச்சிபாறை ஓடவள்ளி பகுதியை சேர்ந்த 27 வயதாகும் சங்கீத் , கேரள மாநிலம் நிலமாமூடு பகுதியை சேர்ந்த 26 வயதாகும் மிதுன் ஆகியோர் வேலை செய்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தம்பதியினருக்கும், மிதுன், சங்கீத் ஆகியோருக்கும் இடையே வேலை தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருமே சுற்றுலா டிராவல் நிறுவனம் நடத்தும் தம்பதியிடம் வேலைக்கு வரவில்லையாம். அதேநேரம் சுற்றுலா டிராவல் நிறுவன தம்பதி இருவரும் தனிமையாக இருந்த அந்தரங்க வீடியோவை மனைவியின் செல்போனுக்கு அனுப்பி உள்ளார்கள், இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண், கணவரிடம் அதுபற்றி கூறியுள்ளார்.
பின்னர் இந்த வீடியோ தம்பதியின் பக்கத்து வீட்டுக்காரர்களின் செல்போனுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பக்கத்து வீட்டில் உள்ளவருக்கு வந்த வீடியோவை குறிப்பிட்டு, வெளிநாட்டு எண்ணில் இருந்து தம்பதிக்கு போன் வந்திருக்கிறது. அதில் உங்களது அந்தரங்க வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.10 லட்சம் தர வேண்டும் என மர்ம நபர் ஒருவர் பேசியிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் வெள்ளறடை போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
பின்னர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்தரங்க வீடியோவை சங்கீத் மற்றும் மிதுன் ஆகியோர் தான் வெளியிட்டுள்ளனர் என்பதை கண்டுபிடித்தார்கள் இதனை தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள். இருவரும் தலைமறைவாகிவிட்ட நிலையில், அவர்களை பிடித்தால் தான் எப்படி வீடியோவை எடுத்தார்கள் என்பது தெரியவரும். ஏனெனில் இந்த வீடியோவை அவர்கள் ரகசிய கேமரா வைத்து எடுத்தார்களா? அல்லது சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவரின் செல்போனில் இருந்து திருட்டுத்தனமாக எடுத்தார்களா? என்பது விசாரணைக்கு பின்னரே தெரியவரும். வேலை செய்த நிறுவனத்தின் முதலாளியின் அந்தரங்க வீடியோவை எடுத்து பணம் கேட்டு ஊழியர்கள் மிரட்டிய சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications