Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அங்கே பாருங்க.. ரெண்டு பேரும் ஆண்கள்.. அப்புறம் ஏன் மணக்கோலம்? விழிப்புணர்வை வியந்து பார்த்த மக்கள்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் இருவர், வரதட்சணை ஒழிப்பு தொடர்பாக நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டனர். பட்டாடை அணிந்து, மணக்கோலத்தில், வித்தியாசமான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த இளைஞர்களை, பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

வரதட்சணை வாங்குவதும், கொடுப்பதும் வரதட்சணை சட்டத்தின்படி குற்றம் என அனைவருக்கும் தெரியும். ஆனாலும், வரதட்சணை கொடுத்தால்தான் திருமணத்திற்கே சம்மதம் தெரிவிப்போம் என சிலர் வைராக்கியத்துடன் இருந்து வருகிறார்கள். வேறு சிலரோ, வரதட்சணை கொடுப்பதை கவுரவமாக கருதி வருகிறார்கள்.

இருப்பவர்கள் வரதட்சணையை கொட்டி கொடுக்கிறார்கள். இல்லாதவர்கள் வரதட்சணை கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் வரதட்சணை கொடுமை, புதுப்பெண் தற்கொலை, விவாகரத்து என விரும்பதாக சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளன. வரதட்சணை ஒழிப்பு குறித்து எத்தனையோ விழிப்புணர்வுகளை அரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் ஏற்படுத்தி வந்த போதிலும், இதுபோன்ற சம்பவங்கள் இன்னும் அரங்கேறிதான் வருகின்றன.

பட்டதாரி இளைஞர்கள்

பட்டதாரி இளைஞர்கள்

இந்நிலையில், வரதட்சணை கொடுமை, வரதட்சணை ஒழிப்பு என்பதை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில், கன்னியாகுமரியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள், நூதன முறையில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளனர். வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த ஜெனிஷ், சுமிஷ் என்ற இருவரும், கடந்த சில மாதங்களாக வித்தியாசமான முறையில் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி, அனைவரையும் தங்கள் பக்கம் ஈர்த்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது, பொதுமக்களுக்கு வித்தியாசமான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்த இவர்கள் திட்டமிட்டனர்.

மணகோலத்தில் பிரச்சாரம்

மணகோலத்தில் பிரச்சாரம்

அதன்படி, எப்போதும் பரபரப்பாக காணப்படும் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில், வரதட்சணை ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதற்காக இளைஞர்கள் இருவரும், பட்டாடை அணிந்து மணமகன் கோலத்தில், கழுத்தில் விளம்பர பலகையை தொங்கவிட்டிருந்தனர். தங்களை திருமணம் செய்வதற்கு மணமகள் இருக்கிறார்களா? எனக் கேட்ட வண்ணம் பேருந்து நிலையத்தில் வலம் வந்தனர். மேலும், தங்களுக்கு வரதட்சணையாக கார், தங்கம், பணம் எதுவும் வேண்டாம். சாதி, மதமும் தேவையில்லை எனவும் அந்த விளம்பர அட்டையில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

பொதுமக்கள் பாராட்டு

பொதுமக்கள் பாராட்டு

தங்கள் கழுத்தில் தொங்க விடப்பட்டிருந்த அந்த விளம்பர விழிப்புணர்வு அட்டையை பொதுமக்களிடம் காண்பித்தப்படி, வரதட்சணை கேட்காதீர்கள், மணமகளின் குணத்தைப் பார்த்து தேர்வு செய்யுங்கள் என விழிப்புணர்வை மேற்கொண்டனர். இளைஞர்களின் இந்த வித்தியாசமான மற்றும் நூதன முறையிலான வரதட்சணை விழிப்புணர்வு பிரச்சாரம், பொதுமக்களை வெகுவாக கவர்ந்ததோடு, அனைவரும் இந்த இளைஞர்களை மனதார பாராட்டி வருகின்றனர்.

இளைஞர்கள் நம்பிக்கை

இளைஞர்கள் நம்பிக்கை

இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் குறித்து இளைஞர்கள் கூறும்போது, கை நிறைய சம்பாதிக்கும் பொறியியல் பட்டதாரியான தாங்கள், வரதட்சணை ஒழிப்பு குறித்து பிரச்சாரம் செய்தால், சிலர் கேலி கிண்டல் செய்கின்றனர். இதனால், வித்தியாசமான முறையில், மணமகன் கோலத்தில், பொதுமக்களை தங்கள் பக்கம் ஈர்க்கும் வகையில் நூதனமுறையில் பிரச்சாரம் செய்து வருவதாக தெரிவித்தனர். தங்களின் இந்த வரதட்சணை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம், சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தூண்டுகோலாக அமையும் என்றும் அந்த இளைஞர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+