பொங்குகிறது குமரி கடல்.. உயர உயர எழும் அலைகள்.. மிரட்சியில் மீ்னவர்கள்!
கடல் அலை உயர எழுந்து வருவதால் குமரி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
குமரி: பொங்கி கொண்டிருக்கிறது குமரி கடல்! உயரமாக எழுந்து எழுந்து அடங்கும் கடல் சீற்றத்தை கண்டு மீனவர்கள் மிரண்டு போய் உள்ளனர்.
இந்த மாதம் ஆரம்பித்த நாளிலிருந்தே கடல் சீற்றமாகத்தான் உள்ளது. ஆனால் கடந்த 2 நாளாக இது இன்னும் அதிகரித்துள்ளது.
இதனால் மீனவ கிராம மக்களை பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்குமாறு கடற்கரை ஆலய பங்கு தந்தையர்கள் ஸ்பீக்கர்கள் மூலம் அறிவுறுத்தினார்கள்.

நாட்டுப்படகுகள்
அதனால் யாரும் சரியாக மீன்பிடிக்ககூட போகவில்லை. தங்கள் படகுகளையும் 30 அடி தொலைவில் பாதுகாப்பாக இழுத்து வந்து நிறுத்தினர். ஆனாலும் நேற்று அதிகாலை கடலின் ஆக்ரோஷம் அதிகரித்துவிட்டது. 2 மணியளவில் கடல் அலைகள் கரைப்பகுதிக்கு வந்து, நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப்படகுகள், வள்ளங்களை அடித்து இழுத்து கொண்டு போனது.

பயமுறுத்திய அலைகள்
கிட்டத்தட்ட 12 படகுகள் மாயமாகி கிடந்ததால், மீனவர்கள் கதி கலங்கி துடித்து போய்விட்டனர். அலைகள் இழுத்து சென்றதை அறிந்த அவர்கள், எப்படியாவது படகுகளை மீட்கலாம் என முயற்சி செய்தார்கள். ஆனால் அலைகள் உயரமாக எழுந்து மீனவர்களை பயமுறுத்தியதால் படகுகளை மீட்க முடியாமலும் அதன் உடைந்த பாகங்கள் மட்டுமே கையில் சிக்கியதாலும், அவைகளை எடுத்து கொண்டு கலங்கிய கண்களுடன் கரை திரும்பினர்.

வெளியேறிய மக்கள்
இவை தவிர, கரையில் நிறுத்தப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட படகுகளும் ஒன்றோடொன்று முட்டி மோதி சேதமாகி விழுந்து கிடக்கின்றன. பள்ளம் பகுதி மக்கள் இந்த சீற்றத்தை கண்டு பயந்து வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டனர். தெரிந்தவர்கள், உறவினர்கள் வீடுகளில் பாதுகாப்பு தேடி தஞ்சம் அடைந்துள்ளனர்.

ராட்சத அலைகள்
படகுகள் பறிபோனது குறித்து அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்துள்ளனர். ராட்சத அலைகள் அவ்வப்போது எழுந்து ஊருக்குள் நுழையும் அபாயமும் இருப்பதால் மீனவ மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications