'மயக்க நிலையிலேயே' வீட்டில் தூங்கிய பெண்ணிடம் அத்துமீறிய எட்வின்.. அடுத்து செய்தது கொடூரத்தின் உச்சம்
கன்னியாகுமரியில் பக்கத்து வீட்டில் இருந்த திருமணம் ஆன பெண்ணை இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், சிசிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் பக்கத்து வீட்டில் இருந்த திருமணம் ஆன பெண்ணை இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், அந்த பெண் சிசிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்த கொடூர சம்பவத்தின் பின்னணியை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறைச் சேர்ந்தவர் 47 வயது பெண், இவரது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் ஒரு மகன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் மகள்கள் இருவரும் திருமணம் ஆகி கணவர்களுடன் வசிக்கிறார்கள். மகன் வெளிநாட்டில் வசிக்கிறார். இதனால் இந்த தம்பதி தனியாக வசிக்கிறார்கள்.
இந்நிலையில் இவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வந்த பொறியியல் பட்டதாரியான எட்வின், கூலித்தொழிலாளியின் மனைவியிடம் பல முறை சில்மிஷத்தில் ஈடுபட முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண், இளைஞரின் பெற்றோரிடம் சொல்லியிருக்கிறார். அத்துடன் இளைஞரையும் கடுமையாக கண்டித்துள்ளார்.

தூங்கி கொண்டிருந்தார்
ஆனால் இதை எல்லாம் ஒரு பொருட்டாகவே எட்வின் எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அத்துடன் எட்வின் தொடர்ந்து கூலி தொழிலாளி மனைவியை நோட்டமிட்டே வந்துள்ளாராம். இந்நிலையில் உறவினர் ஒருவரின் இல்ல நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிவிட்டு வீட்டில் களைப்பாக உறங்கி கொண்டிருந்தார் அந்த கூலித் தொழிலாளியின் மனைவி. அப்போது வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த எட்வின், வீடு புகுந்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் அத்துமீற முயன்றுள்ளார்.

பாலியல் வன்கொடுமை
இதையறிந்து அதிர்ச்சி அடைந்த பெண் கூச்சலிடவே, அவரை சரமாரியாக தாக்கி, கடுமையாக கழுத்தில் மிதித்ததில் நிலைகுலைந்த பெண் மயக்கம் அடைந்துள்ளார். இதையடுத்து மயக்க நிலையில் வைத்தே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் எட்வின். சுயநினைவின்றி கிடந்த பெண்ணை அப்படியே போட்டுவிட்டு தப்பியோடியிருக்கிறார்.

காப்பாற்ற போராட்டம்
இதையடுத்து பெண்ணின் நிலை அறிந்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது ஒன்றும் அறியாதது போல் எட்வினும் பெண்ணின் உறவினர்களுடன் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். பின்னர் காவல் நிலையம் சென்றும் புகாரும் அளித்தது நாடகம் ஆடியதுதான் கொடூரத்தின் உச்சம். இதில் பாதிக்கப்பட்ட பெண் கோமாவில் இருக்கும் நிலையில், பல மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்ற போராடி உள்ளனர்.

சிக்கிய எட்வின்
இதையடுத்து பெண்ணின் நிலை அறிந்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது ஒன்றும் அறியாதது போல் எட்வினும் பெண்ணின் உறவினர்களுடன் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். பின்னர் காவல் நிலையம் சென்று புகாரும் அளித்து நாடகம் ஆடியதுதான் கொடூரத்தின் உச்சம். இதில் பாதிக்கப்பட்ட பெண் கோமாவில் இருக்கும் நிலையில், பல மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்ற போராடி உள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications