Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'மயக்க நிலையிலேயே' வீட்டில் தூங்கிய பெண்ணிடம் அத்துமீறிய எட்வின்.. அடுத்து செய்தது கொடூரத்தின் உச்சம்

கன்னியாகுமரியில் பக்கத்து வீட்டில் இருந்த திருமணம் ஆன பெண்ணை இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், சிசிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் பக்கத்து வீட்டில் இருந்த திருமணம் ஆன பெண்ணை இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், அந்த பெண் சிசிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்த கொடூர சம்பவத்தின் பின்னணியை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறைச் சேர்ந்தவர் 47 வயது பெண், இவரது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் ஒரு மகன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் மகள்கள் இருவரும் திருமணம் ஆகி கணவர்களுடன் வசிக்கிறார்கள். மகன் வெளிநாட்டில் வசிக்கிறார். இதனால் இந்த தம்பதி தனியாக வசிக்கிறார்கள்.

இந்நிலையில் இவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வந்த பொறியியல் பட்டதாரியான எட்வின், கூலித்தொழிலாளியின் மனைவியிடம் பல முறை சில்மிஷத்தில் ஈடுபட முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண், இளைஞரின் பெற்றோரிடம் சொல்லியிருக்கிறார். அத்துடன் இளைஞரையும் கடுமையாக கண்டித்துள்ளார்.

தூங்கி கொண்டிருந்தார்

தூங்கி கொண்டிருந்தார்

ஆனால் இதை எல்லாம் ஒரு பொருட்டாகவே எட்வின் எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அத்துடன் எட்வின் தொடர்ந்து கூலி தொழிலாளி மனைவியை நோட்டமிட்டே வந்துள்ளாராம். இந்நிலையில் உறவினர் ஒருவரின் இல்ல நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிவிட்டு வீட்டில் களைப்பாக உறங்கி கொண்டிருந்தார் அந்த கூலித் தொழிலாளியின் மனைவி. அப்போது வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த எட்வின், வீடு புகுந்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் அத்துமீற முயன்றுள்ளார்.

பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை

இதையறிந்து அதிர்ச்சி அடைந்த பெண் கூச்சலிடவே, அவரை சரமாரியாக தாக்கி, கடுமையாக கழுத்தில் மிதித்ததில் நிலைகுலைந்த பெண் மயக்கம் அடைந்துள்ளார். இதையடுத்து மயக்க நிலையில் வைத்தே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் எட்வின். சுயநினைவின்றி கிடந்த பெண்ணை அப்படியே போட்டுவிட்டு தப்பியோடியிருக்கிறார்.

காப்பாற்ற போராட்டம்

காப்பாற்ற போராட்டம்

இதையடுத்து பெண்ணின் நிலை அறிந்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது ஒன்றும் அறியாதது போல் எட்வினும் பெண்ணின் உறவினர்களுடன் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். பின்னர் காவல் நிலையம் சென்றும் புகாரும் அளித்தது நாடகம் ஆடியதுதான் கொடூரத்தின் உச்சம். இதில் பாதிக்கப்பட்ட பெண் கோமாவில் இருக்கும் நிலையில், பல மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்ற போராடி உள்ளனர்.

சிக்கிய எட்வின்

சிக்கிய எட்வின்

இதையடுத்து பெண்ணின் நிலை அறிந்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது ஒன்றும் அறியாதது போல் எட்வினும் பெண்ணின் உறவினர்களுடன் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். பின்னர் காவல் நிலையம் சென்று புகாரும் அளித்து நாடகம் ஆடியதுதான் கொடூரத்தின் உச்சம். இதில் பாதிக்கப்பட்ட பெண் கோமாவில் இருக்கும் நிலையில், பல மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்ற போராடி உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+