"சார் இந்த பஸ்ஸுக்கு கன்டக்டர் இல்லையா?.. டிக்கெட் வாங்கனுமே!.." பதறி அடித்து பிரேக் பிடித்த டிரைவர்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே பேருந்தில் இருந்து கன்டக்டர் விழுந்தது கூட தெரியாமல் 5 கி.மீ. தூரம் டிரைவர் ஓட்டிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் வடக்கன்குளத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டு இருந்தது. பேருந்துக்குள் சிலர் பயணிகளே இருந்தனர்.
இந்த நிலையில் பேருந்து ஆரல்வாய்மொழி வந்ததும், அங்கு சில பயணிகள் பேருந்தில் ஏறினர். அப்பேது டிக்கெட் எடுக்க ஆயத்தமாகினர். ஆனால் பேருந்தில் கன்டக்டர் இல்லை.

டிக்கெட்
இதையடுத்து ஒருவர் டிரைவரிடம் சென்று "சார் டிக்கெட் எடுக்க வேண்டும். இந்த பேருந்தில் கன்டக்டர் இல்லையா, எப்படி டிக்கெட் எடுக்கறது சார்" என கேட்டுள்ளார்கள். உடனே டிரைவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பேருந்தை டிரைவர் ஓரமாக நிறுத்தினார்.

மருத்துவமனை
பின்னர் அந்த வழியாக சென்ற ஒருவரின் இரு சக்கர வாகனத்தில் ஏறி டிரைவர் தேடி சென்றார். அப்போது 5 கிலோமீட்டர் தூரம் சென்றார். அதற்குள் மூப்பந்தல் என்ற இடத்தின் அருகே காயங்களுடன் விழுந்து கிடந்த கன்டக்டர் மகாலிங்கத்தை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தவறி விழுந்த கன்டக்டர்
விசாரணையில் பேருந்தின் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த கன்டக்டர் மகாலிங்கம், எதிர்பாராதவிதமாக கீழே விழுந்துள்ளார். இவர் கீழே விழுந்தது டிரைவருக்கு தெரியவில்லை. இதனால் அவர் பாட்டுக்கு சென்றுவிட்டார். இதை கேட்டு டிரைவர் அதிர்ச்சி அடைந்தார்.

பொதுமக்கள்
உடனே பேருந்தை எடுத்துக் கொண்டு பணிமனையில் நிறுத்தினார் டிரைவர். பின்னர் மகாலிங்கத்தை பார்க்க மருத்துவமனைக்கு சென்றார். ஒரு கன்டக்டர் கீழே விழுந்தது கூட தெரியாமல் இவர் என்னத்த வண்டி ஓட்டுகிறாரோ என பொதுமக்கள் தெரிவித்தனர்.

ஆபத்து
மேலும் அதில் இருந்த சில பயணிகளும் இதை கவனிக்காதது வேதனை அளிக்கிறது என்றார்கள். ஒரு வேளை யாரும் நடமாட்டம் இல்லாத இடத்தில் கன்டக்டர் விழுந்திருந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்திருந்தால் அவரது நிலை என்னவாவது என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications