உடம்பில் ஏறி உட்கார்ந்த சாத்தான்.. கதவை நீண்ட நேரம் திறக்கவில்லை.. துடிதுடித்து போன கன்னியாகுமரி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த சம்பவம், ஒட்டுமொத்த பெற்றோர்களையும் கதிகலங்க செய்து வருகிறது.. 8 வயது சிறுவனை ஸ்கிப்பிங் கயிறால் சரமாரியாக அடித்து தாக்கப்பட்டுள்ளான்.. உடம்பெல்லாம் காணப்பட்ட ரத்த காயங்கள் பலருக்கும் அதிர்ச்சியையும், வேதனையையும் கலக்கத்தையும் தந்து வருகிறது.. இது தொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி வருகிறார்கள் என்றாலும், குமரி சம்பவத்தின் அதிர்வலைகள் இன்னமும் விலகவில்லை.
கன்னியாகுமரி மாவட்டம் தேவிகோடு இடைக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் கிங்ஸ்லி.. 45 வயதாகிறது.. அந்த பகுதியில் மதபோதகராக செயல்பட்டு வருகிறார்.. அந்த பகுதியில் உள்ள சபைகளில் போதனைகளை செய்து வந்துள்ளார். இவருடைய மனைவி பெயர் சஜினி.

இந்த தம்பதிக்கு ஆறு மற்றும் மூன்று வயதில் 2 மகன்களும், 8 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
3 குழந்தைகளையும் காணவில்லை
இந்நிலையில், நேற்றைய தினம் கிங்ஸ்லியும், அவரது மனைவியும் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்திருக்கிறார்கள்.. அப்போது அவருடைய குழந்தைகள் பக்கத்து வீட்டிற்கு சென்று விளையாடி கொண்டிருந்தார்கள்.. இது கிங்ஸ்லிக்கு பிடிக்கவில்லை.. எனவே ஆத்திரமடைந்த கிங்ஸ்லி, 3 குழந்தைகளையும் வீட்டுக்கு வரவழைத்து, கயிற்றால் சரமாரியாக விளாசி தள்ளியிருக்கிறார்..
இதைப்பார்த்து அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் அதிர்ச்சி அடைந்து கருங்கல் போலீசுக்கு தகவல் தந்தனர்.. உடனே போலீசார் விரைந்து வந்து 3 குழந்தைகளையும் கிங்ஸ்லியிடமிருந்து மீட்டனர்.. பிறகு கிங்ஸ்லியை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.. அப்போது போலீசாரிடம் கிங்ஸ்லி சொன்னதாவது:
பகீர் வாக்குமூலம்
"எனக்கு அக்கம்பக்கம் வீடுகளில் குழந்தைகள் பழகுவது பிடிக்காது.. அதனால், தினமும் ஊழியத்துக்கு செல்லும்போது குழந்தைகளை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு செல்வது வழக்கம். நேற்று வெளியில் சென்றுவிட்டு, வீட்டுக்கு வந்தால், குழந்தைகளை காணவில்லை.
பக்கத்து வீட்டில் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்... குழந்தைகள் மீது சாத்தான் புகுந்து விட்டதாகவும், அதனால் தான் வீட்டை விட்டு வெளியேறி சென்றுவிட்டதாகவும் நினைத்து பயந்துவிட்டேன்.. உடம்பில் சாத்தான் புகுந்து விட்டதுல்தான், அதனை உடம்பிலிருந்து சாத்தானை விரட்ட கயிற்றினால் கட்டி வைத்து அடித்தேன்" என்றார்.
இந்த வாக்குமூலத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், கிங்ஸ்லியை கைது செய்தனர்.. உடம்பெல்லாம் காயமடைந்த 3 குழந்தைகளையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்..
நாங்கள் இருக்கோம்
தனது 8 வயது மகனை ஸ்கிப்பிங் ரோப்பால் சரமாரியாக கிங்ஸ்லி தாக்கியுள்ளார். ரத்த காயங்களுடன் உட்கார்ந்திருந்த சிறுவனிடம் பக்கத்து வீட்டு சிறுவர்கள், "நாங்க உன்ன பத்திரமா பாத்துகிறோம் சரியா? அழாதே" என்று சமாதானம் கூறும் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.
இந்த வீடியோவை பார்த்து பதறிப்போன மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள், உடனடியாக விரைந்து சென்று சிறுவனின் சிகிச்சையை தீவிரப்படுத்தினார்கள்.. இப்போது போலீசார் கிங்ஸ்லியை கைது செய்து விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
நீண்ட நேர அலறல்
நீண்ட நேரமாக குழந்தைகள் அலறும் சத்தம் அக்கம் பக்கத்தில் கேட்டிருக்கிறது.. அதனால்தான், அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை தட்டினர்... கதவு திறக்கப்படவில்லை. இதற்கு பிறகு பொதுமக்கள் கருங்கல் போலீசாரிடம் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து கதவை தட்டினால், அப்போதும் திறக்கவில்லையாம்.. சென்று நீண்ட நேரம் நேரம் கழித்து கிங்ஸ்லி கில்பர்ட் கதவை திறந்துள்ளார்.. அப்போது மூன்று குழந்தைகளையும் கயிற்றால் கட்டி கொடூரமாக அவர் தாக்கியதை பார்த்து போலீசார் உறைந்துபோய் நின்றுள்ளனர்.
மூடநம்பிக்கைகள்
தமிழகம் மட்டுமல்லாமல் மூடநம்பிக்கைகள் உலகளாவிய அளவில் பரவி கிடக்கிறது.. அனைத்து மதங்களிலுமே இந்த மூட நம்பிக்கைகள் பல உயிர்களை காவு வாங்கி கொண்டிருக்கின்றன.. நினைத்ததையெல்லாம் நடத்தித் தந்துவிட்டு, அதன் பிறகு நரபலி போன்ற பயங்கரங்களையும் சிலர் அரங்கேற்றி விடுகிறார்கள் . படித்தவர்களே, இதுபோன்ற மூட நம்பிக்கைகளில் ஈடுபடுவது அதைவிட வேதனையை தந்து கொண்டிருக்கிறது
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications