கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மிஸ்ட் கால் மூலம் அறிமுகமான ராக்கி.. 6 வருட காதல்.. சீரழித்து அடித்து கொன்று.. அகிலுக்கு வலைவீச்சு

காதலியை அடித்து கொன்ற ராணுவ வீரரை போலீசார் தேடி வருகிறார்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    காதலியை அடித்து கொன்ற ராணுவ வீரருக்கு வலை-வீடியோ

    கன்னியாகுமரி: ஒரு மிஸ்டு கால் மூலம் அறிமுகமான ராக்கியை.. 6 வருடங்கள் காதலித்து.. சீரழித்து.. அடித்து கொன்று, தன் வீட்டு தோட்டத்திலேயே புதைத்து உள்ளார் ஒரு ராணுவ வீரர்!

    தமிழக-கேரளா எல்லைப்பகுதியை ஒட்டிய ஒரு மலையோர கிராமம்தான் அம்பூரி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் அகில். 26 வயசு.

    6 வருஷத்துக்கு முன்னாடி இவருடைய செல்போனுக்கு அழைப்பு வந்தது. ஆனால் அது ராங்-கால். திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள திருபுறம் கிராமத்தைச் சேர்ந்த ராக்கி என்ற பெண் பேசியுள்ளார். தவறான செல்போன் அழைப்பு என்றாலும், இருவருக்கும் பழக்கம் ஆரம்பமானது.

    ராக்கி

    ராக்கி

    ராக்கி ஒரு ஏழைவீட்டு பெண் என்று கூறப்படுகிறது. ரெண்டு பேர் பழக்கமும் காதலாக மாறியது. இந்த காதல் விவகாரம் அகில் வீட்டுக்கும் தெரிந்தது. அதற்கு யாருமே எதிர்ப்பு சொல்லவில்லை. அந்த சமயத்தில்தான் அகிலுக்கு ராணுவத்தில் வேலை கிடைத்தது.

    நிச்சயம்

    நிச்சயம்

    நல்ல வேலையில், நல்ல சம்பளம் கிடைக்கவும், அவருக்கு பணக்கார வீட்டுப் பெண்ணாக பார்த்து கல்யாணம் செய்ய வீட்டில் முடிவு செய்தார்கள். பெற்றோரின் இந்த முடிவுக்கு அகிலும் சம்மதம் சொல்ல, போன மாசம் வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது.

    சடலம்

    சடலம்

    இந்த சமயத்தில் ராக்கி திடீரென மாயமானார். அதனால் அவரது பெற்றோர் போலீசில் புகார் தந்தனர். போலீசாரும் ராக்கியை தேடி வந்த நிலையில், அவருடைய செல்போன் ஆய்வு செய்யப்பட்டது. அதன் நகர்வு கடைசியாக, அகிலின்காட்ட, போலீசாரும் கண்டுபிடித்து வந்துவிட்டனர். இறுதியில், அகிலின் வீட்டுத் தோட்டத்திலேயே சடலமாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளார் ராக்கி.

    கொலை

    கொலை

    நடக்க போகிற கல்யாணத்துக்கு ராக்கி தடையாக இருப்பார் என்று நினைத்து, அகில் அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். அதனால் அகில் மற்றும் அவரது குடும்பத்தார் ராக்கியை காரில் உட்கார வைத்து கொண்டு தனியாக அழைத்து சென்றுள்ளனர். வேறு பெண்ணை கல்யாணம் செய்வதால் விலகிவிடுமாறு சொல்ல, அதற்கு ராக்கி மறுப்பு சொல்லி அழுதுள்ளார். இதனால் குடும்பத்தினர் சேர்ந்து ராக்கியை அடித்தே கொன்றுள்ளனர்.

    கைது

    கைது

    பிறகு சடலத்தை கொண்டு வந்து தங்கள் வீட்டு தோட்டத்திலேயே புதைத்துள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலையில், அகிலின் சகோதரர் ராகுல், நண்பன் ஆதர்ஷ் ஆகியோரையும் கைது செய்த போலீசார், மாயமாகி உள்ள அகிலை தேடி வருகின்றனர். ஒரு ஏழை பெண்ணை 6 வருஷமாக ஏமாற்றிவிட்டு, கடைசியில் கொலையும் செய்த ராணுவ வீரரின் செயல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Poor young girl killed by his lover near Kanniyakumari and Police investigation is going on it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X