களைகட்டும் ஜோடோ யாத்திரை! எதிர்பார்க்கவே இல்லை.. ராகுலை யார் சந்திச்சாங்கன்னு பாருங்க! என்ன நடந்தது?
கன்னியாகுமரி: பாரத் ஜோடோ யாத்திரையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை சந்திக்க கன்னியாகுமரியில் மக்கள் பலர் குவிந்து வருகின்றனர்.
பாரத் ஜுடோ யாத்திரையின் 2வது நாள் பயணத்தை இன்று அதிகாலை தொடங்கினார் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி. பயணத்தை தொடங்கும் முன் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செய்தார்.
அகஸ்தீஸ்வரத்தில் இன்று இரண்டாவது நாள் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.இன்று 20-30 கிமீ தூரத்திற்கு ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராகுல் காந்தியுடன் இன்று 50 ஆயிரத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் யாத்திரை செய்கின்றனர். காங்கிரஸ் நிர்வாகிகள் இதற்காக களமிறக்கப்பட்டுள்ளனர். பல ஊர்களில் இருந்து காங்கிரஸ் நிர்வாகிகள் ராகுலுடன் பயணம் செய்ய உள்ளனர்.

ராகுல் காந்தி
இந்த பயணத்தில் ராகுல் காந்தியுடன் இன்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள், காங்கிரஸ் கட்சி எம்பி ஜோதிமணி ஆகியோர் உடன் இருந்தனர். இரண்டாம் நாள் பயணம் என்பதால் செய்தியாளர்கள் பலர் இருந்தனர். ராகுல் காந்தி முன் வரிசையில் நடந்து வந்தார். ராகுல் காந்தியை சுற்றி அரண் போல தொண்டர்கள் இருந்தனர். ராகுல் காந்தியை சுற்றி இவர்கள் கைகளை வைத்து கோர்த்து பாதுகாப்பாக நின்றனர். ஆனாலும் மக்கள் இவரிடம் பேச அனுமதிக்கப்பட்டனர்.

பயணம்
ராகுல் காந்தி செல்லும் வழியில் ஆங்காங்கே மக்களை சந்தித்தார். அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இவருக்கு தமிழ் தெரியாது. குமரியில் பெரும்பாலானோருக்கு இந்தி தெரியாது என்பதால் அவர்களிடம் ராகுல் காந்தி ஆங்கிலத்தில் பேசினார். ஜோதிமணி உள்ளிட்டோர் இவர்களுக்கு மொழிபெயர்த்தனர். அப்போதுதான் திடீரென ராகுல் காந்தியை நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் குடும்பத்தினர் சந்தித்தனர்.

அனிதா
அனிதாவின் சகோதரர் ராகுல் அருகே சென்று அவருடன் பேசினார். கையில் நீட் தொடர்பான கோரிக்கை மனு ஒன்றை வைத்து இருந்தார். நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்று கோரிக்கை வைத்து அவர் இந்த மனுவை கொடுத்தார். ராகுல் காந்தி அவரின் கோரிக்கையை கேட்டுக்கொண்டார். அதோடு ராகுல் காந்தியின் அவரின் குடும்ப நிலை குறித்து அனிதாவிடம் சகோதரரிடம் பேசினார். நடந்தபடியே இருவரும் உரையாடிக்கொண்டு இருந்தனர்.

ராகுல் காந்தி யாத்திரை
ராகுல் காந்தி முன்பே தமிழ்நாட்டில் லோக்சபா பிரச்சாரத்தின் போது நீட் தேர்விற்கு எதிராக பேசியது குறிப்பிடத்தக்கது.இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் நேற்றுதான் வெளியானது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வு எழுதியவர்களில் தமிழ்நாட்டில் 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருத்தேவ் விநாயகா என்ற மாணவர் 705 மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டில் முதலிடம் பெற்றுள்ளார். இந்திய அளவில் அவர் 30வது இடத்தை பிடித்துள்ளார். ஹரிணி என்ற தமிழ்நாடு மாணவி தமிழ்நாட்டில் இரண்டாம் இடமும். தேசிய அளவில் 43வது இடமும் பெற்றுள்ளார். நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த மாணவி இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.
-
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
ராகுல் சொல்லியும் அடங்கலையே! கூட்டணிக்குள் குண்டு வைக்கும் மாணிக்கம் தாகூர்! -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications