மின் இணைப்புக்காக நடையாய் நடக்கும் ஏழை தொழிலாளி.. தொடர்ந்து அலைக்கழிக்கும் குமரி மின்சார வாரியம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் வலியாற்றுமுகம் அருகே 4 வருடமாக வீட்டில் மின்சாரம் இல்லாமல் இருட்டில் விஷ ஜந்துக்களின் மத்தியில் குழந்தைகளுடன் ஏழை குடும்பம் தவித்து வருகின்றது. மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தும் தங்களை மின்வாரிய துறையினர் அலைக்கழிப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள்.
Recommended Video
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே வலியாற்றுமுகம் செட்டியாவிளை பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கு மூன்று பெண் மற்றும் இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் தனது மனைவி சமரசம் பெயரில் 5 சென்ட் நிலம் வாங்கினார்.
அதில் தனியார் நிறுவனத்தில் ரூ 2 லட்சம் கடன் வாங்கி வீடு கட்டியுள்ளார். வீட்டு கட்டுமான பணிகள் முழுவதுமாக நடைபெறாவிட்டாலும் சொந்த வீட்டில் இருக்கும் எண்ணத்தில் அங்கு குடியேற நினைத்தார்.

உரிமையாளர்
இதையடுத்து அயக்கோடு கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தனது வரைப்படத்தை அனுமதி பெற அணுகியபோது தங்கராஜ் தலையில் இடி விழுந்தது போல ஒரு தகவலை அதிகாரிகள் கூறினர். அதாவது தங்கராஜ் வாங்கிய பகுதியில் வீடு கட்டுவதற்கு அனுமதி இல்லை என்றும் அந்த வீட்டுக்கு பக்கத்து நிலத்தின் உரிமையாளர் மாவட்ட ஆட்சியருக்கு புகார் கொடுத்துள்ளார்.

ஆட்சியர்
எனவே பஞ்சாயத்து மூலம் உங்களுக்கு அனுமதி தரமுடியாது என சொல்லி தட்டி கழித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். கூலி வேலைக்குக் கூடச் செல்லாமல் மின் வாரிய அலுவலகம், பஞ்சாயத்து அலுவலகம், கலெக்டர் அலுவலகம் என நடையாய் நடந்தது தான் மிச்சம்.

உயிரை கையில் பிடித்துக் கொண்டு
தற்போது தனது இளைய மகன், அவரது மனைவி 5 வயது குழந்தையுடன் பாம்பு, தேள் போன்ற விஷஜந்துக்களுக்கு மத்தியில் தங்களது உயிரை கையில் பிடித்தப்படி தினம் தினம் இரவு தூங்கி விடிந்தால் உயிர் இருக்கிறதா என்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

மின்சாரம்
மின்சார வாரியமும் மாவட்ட நிர்வாகமும் தங்களை அலைக்கழிப்பதாக குற்றம்சாட்டிய அவர் எங்களுக்கு மின்சார வாரியம் தயவு கூர்ந்து மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications