தேர்தல் நெருங்க நெருங்க திமுக கூட்டணி கட்சிகளுக்கு பித்தம் தலைக்கேறும்.. பொன் ராதாகிருஷ்ணன் தாக்கு!
Recommended Video
கன்னியாகுமரி: நம்பி பேசியதை வெளியில் சொல்வது அநாகரீகம் என்றும் தேர்தல் நெருங்க நெருங்க திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு பித்தம் தலைக்கேறும் என்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு வாரத்தில் வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று நாட்கள் இயக்கப்படும் அதி விரைவு ரயிலை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர் சொன்னதாவது: "கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் வசதிக்காக புதிய ரயில் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. மத்திய அரசு குமரிமாவட்ட மக்களுக்காக ஏராளமான திட்டங்களை கொடுத்துள்ளது.
மாணவர்களுக்குள் மோதல்.. சண்டையை விலக்கி விட்ட பேராசிரியரின் மண்டை உடைந்தது!
இரட்டை ரயில் பாதை
இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்ற பின்னர் குமரி ராயில்வேயை மதுரை கோட்டத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் இரட்டை ரயில்பாதை திட்டம் குறித்த தவறான தகவலை மக்கள் மத்தியில் பரப்பி உள்ளார்.
பேசக்கூடாது
இந்த திட்டம் குறித்து தெரியவில்லை என்றால் பரவாயில்லை, தெரிந்தும் பொய் கூறி இருந்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஸ்டாலின் அந்த கருத்தை திரும்ப பெற வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள் குறித்த போதிய புரிதல் இல்லையென்றால் அது குறித்து ஸ்டாலின் பேச கூடாது. தெரியாத ஒரு சப்ஜெக்டை எடுத்து பேசினால் அது அடி முட்டாள் தனமான இருக்கும்.
ஒரே சிந்தனை
தேமுதிக நிச்சயம் தங்கள் கூட்டணியில் வரும். எங்கள் கூட்டணியால் சொந்த பலத்தில் ஜெயிக்க முடியும், ஆனால் நாட்டிற்கு நல்லது நடக்க வேண்டும் என்ற ஒத்த சிந்தனை உடையவர்கள் ஒன்று சேர வேண்டும் என்பதால் தேமுதிக விடம் பேசி வருகிறோம்.
கூட்டணி
நாட்டில் நல்ல ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. இந்த தொடர வேண்டும் என விரும்புபவர்கள் தங்கள் கூட்டணியில் வர வேண்டும். கூட்டணிக்காக ஒருவர் தனிப்பட்ட முறையில் நம்பி பேசிய பேச்சுக்களை வெளியில் சொல்வது அநாகரீகம். திமுக வின் இந்த அநாகரிக செயலை ஏற்றுக்கொள்ள முடியாது, இதனை விட அவமானம் வேறு எதுவும் இல்லை. அடிப்படை நாகரீகத்தை அனைத்து கட்சிகளும் கடைபிடிக்க வேண்டும். தேர்தல் நெருங்க நெருங்க திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு பித்தம் தலைக்கேறும்" என்றார்.