கன்னியாகுமரியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு படகில் பயணம்.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
திரௌபதி முர்மு இன்று கன்னியாகுமரி வந்துள்ளார்.
கன்னியாகுமரி: இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று கன்னியாகுமரி வந்துள்ளார். இதனால் அங்கு முழுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது.
நமது நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக உள்ளவர் திரௌபதி முர்மு. குடியரசுத் தலைவராக இருந்த ராம் கோவிந்த் பதவிக்காலம் கடந்தாண்டு நிறைவடைந்த நிலையில் திரௌபதி முர்மு குடியரசு தேர்தலில் வென்றார்.
இதனிடையே குடியரசு திரௌபதி முர்மு கடந்த மாதம் ஜனாதிபதியான பிறகு முதல்முறை மதுரை வந்திருந்தார். மதுரையில் பல்வேறு இடங்களையும் அவர் சுற்றிப் பார்த்தார்.

கன்னியாகுமரி வருகை
இதனிடையே இப்போது இரண்டு நாள் பயணமாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கேரளா சென்றுள்ளார். கேரளாவில் கொச்சியில் அமைந்துள்ள ஐஎன்எஸ் துரோணாச்சாரியா போர்க்கப்பலில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். மேலும், ஐஎன்எஸ் துரோணாச்சாரியாவுக்கு குடியரசுத் தலைவர் பதக்கத்தையும் அவர் வழங்கினார்.. இதனிடையே பயணத்தின் ஒரு பகுதியாக அவர் கன்னியாகுமரி வந்தார்.

கேரளாவில் இருந்து
இன்று அவர் கேரளாவின் திருவனந்தபுரத்திலிருந்து விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்கிருந்து பாதுகாப்பாக கார் மூலம் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக படகு தளத்துக்கு ஜனாதிபதி சென்றார். கன்னியாகுமரியில் ஜனாதிபதியை ஆளுநர் ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் வரவேற்றனர். அங்கிருந்து தனி படகு மூலம் அவர் நினைவு மண்டபத்திற்குச் சென்றார்.

தனிப்பட மூலம்
இதையடுத்து மீண்டும் தனிப்படகு மூலம் கரைக்குத் திரும்பும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, கார் மூலம் விவேகானந்த கேந்திர வளாகத்திற்குச் செல்கிறார். அங்குள்ள ராமாயண கண்காட்சி கூடத்தையும் திரௌபதி முர்மு பார்வையிடுகிறார். அங்குள்ள பாரதமாதா கோயிலிலும் வழிபாடு நடத்துகிறார். இதையடுத்து தனது பயணத்தை முடித்துக் கொள்ளும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, கார் மூலம் அரசு விருந்தினர் மாளிகைக்குச் சென்று, அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார்.

ட்ரோன் பறக்கத் தடை
குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் போலீசார் வாகன ஒத்திகையை நடத்தினர். மேலும், அப்பகுதி முழுக்க வெடிகுண்டு வல்லுநர்களும் சோதனை நடத்தினர். மேலும், குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு இன்று குமரியில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், அவர் தீவிர ரோந்து பணிகளில் இறங்கியுள்ளார்.

சுற்றுலாப் பயணிகள்
குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு, கன்னியாகுமரி கடற்கரை, திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு மூன்று மணி நேரம் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாகக் காலை 8 முதல் மாலை 5 மணிவரை விவேகானந்தர் பாறைக்குப் படகு இயக்கப்படும் நிலையில், இன்று மட்டும் குடியரசுத் தலைவர் கன்னியாகுமரியிலிருந்து கிளம்பும் வரை படகு சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications