உரிய அனுமதியில்லாத கட்டிடம்... நாகர்கோவிலில் பிரபல நகைக்கடைக்கு சீல்
கன்னியாகுமரி: நாகர்கோவிலில் இயங்கி வரும் ஜாய் ஆலுக்காஸ் தங்க நகைக்கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, நாகர்கோவில் நகராட்சி பகுதிகளில் மட்டும் சுமார் 55 கட்டிடங்கள் விதிமுறைகள் மீறி கட்டப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவுபடி, குமரி மாவட்டம் முழுவதும் பல கட்டிடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ராம்ராஜ் என்பவருக்கு சொந்தமான 3 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில், ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடை இயங்கி வந்தது. ஏற்கனவே இந்த கட்டிடம் உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டு உள்ளதாகவும் இதனை அப்புறப்படுத்த வேண்டும் என கூறி உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள் நோட்ஸ் அனுப்பினர்.

இதனை எதிர்த்து ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டு வழக்கு நடைபெற்று வந்தது. ஆனால், கடந்த 28 ஆம் தேதி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, இன்று அந்த கட்டிடத்திற்கு நாகர்கோவில் நகராட்சி அதிகாரிகள் மற்றும உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள் சீல் வைத்தனர்.

உடுப்பி ஹோட்டலுக்கு சீல் வைப்பு
இதேபோல விதிமுறைகளை மீறியும் உரிய அனுமதி இன்றியும் பல அடுக்கு மாடி கட்டிடங்களுடன் கட்டப்பட்ட உடுப்பி இன்டெர்னேஷனல் ஹோட்டல், விடுதி, திருமண மண்டபம் உட்பட பல்வேறு கட்டிடங்களுக்கும் நகராட்சி மற்றும் உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுப்படி சீல் வைத்தனர்.
நாகர்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உரிய அனுமதி பெறாமலும் விதிமுறைகளை கடைபிடிக்காமல் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டு உள்ளது. குறிப்பாக நாகர்கோவில் நகராட்சி பகுதிகளில் மட்டும் சுமார் 58 பல மாடி கொண்ட கட்டிடங்கள் விதிமுறைகள் மீறி கட்டப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதன் படி நீதிமன்ற உத்தரவு பெற்று சமீபமாக குமரி மாவட்டம் முழுவதும் பல கட்டிடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் வடசேரி பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரபல உடுப்பி இன்டெர்னேஷனல் நிறுவனம், விடுதி, திருமண மண்டபம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஏற்கனவே இந்த கட்டிடங்கள் உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டு உள்ளதாகவும் இதனை அப்புறப்படுத்த வேண்டும் என கூறி உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள் நோட்ஸ் அனுப்பினர்.
இதனை எதிர்த்து பல்வேறு நிறுவனங்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கை கடந்த 28 ஆம் தேதி நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு விதிமுறைகள் மீறப்பட்டால் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது, நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இன்று விதிமுறைகள் மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு நாகர்கோவில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள் சீல் வைத்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications