Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கன்னியாகுமரியில் கொடூர கொலை... தம்பதியர் பலி... மகள் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: ஆரல்வாய்மொழி அருகே வீட்டிற்குள் புகுந்து மர்மகும்பல் சரமாரியாக வெட்டியதில் கணவன், மனைவி சம்பவ இடத்திலே துடி, துடித்து உயிரிழந்தனர். மகள் படுகாயமடைந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்து என்ற மணிகண்டன் (50).

இவர் தோவாளை மலர் சந்தையில் மொத்த பூ வியாபாரம் செய்து வந்தார்.

மர்மகும்பல் வெறியாட்டம்

மர்மகும்பல் வெறியாட்டம்

இவருக்கு கல்யாணி (35) என்ற மனைவியும் 10 ம் வகுப்பு படிக்கும் ராமலட்சுமி(15) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் பூ வியாபாரி வீட்டிற்க்குள் புகுந்தது மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல்.

சரமாரியாக வெட்டு

சரமாரியாக வெட்டு

திடீரென அந்த கும்பல் பூ வியாபாரி முத்து மற்றும் அவரது மனைவி மற்றும் மகளை கண்மூடிதனமாக வெட்டினார்கள். இதில் தலை, கை வயிறு உட்பட பல இடங்களில் வெட்டுபட்ட முத்துவின் மனைவி வீட்டிலேயே பரிதாபமாக பலியானார்.

மகள் படுகாயம்

மகள் படுகாயம்

மேலும் பூ வியாபாரி முத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மகள் ராமலட்சுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குபதிவு செய்து, கொலை குறித்து விசாரனை நடத்தி வருகிறார்கள். பரப்பரப்பான தோவாளை மலர் சந்தை அருகிலேயே அமைந்துள்ள தெருவில் மர்ம கும்பலால் ஒரு குடும்பமே வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+