13 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பல்.. 3 பெண்களுக்கு ஆயுள்.. ஒருவருக்கு இரட்டைஆயுள்
13 வயது சிறுமியை விபச்சாரத்தில் தள்ளிய 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது
கரூர்: "என் பொண்ணை கலைச்செல்வி கும்பல் கடத்திக் கொண்டுபோய் வைத்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர்.. நீங்கதான் என் மகளை அந்த கும்பல்கிட்ட இருந்து மீட்டு தரணும்" என்று அன்று கண்ணீர் மல்க கேட்ட குடும்பத்தினருக்கு இன்று கரூர் நீதிமன்றம் நியாயம் வழங்கி உள்ளது. 13 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 3 பெண்களுக்கு ஆயுள் தண்டனையும், ஒரு நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனயைும் வழங்கி கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.
2017, நவம்பர் மாதம் நடைபெற்ற சம்பவம் இது: கரூரை அடுத்த வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா என்கிற கலைச்செல்வி. இவருக்கு 29 வயதாகிறது. இவர் வீட்டுக்கு அருகில் 13 வயது சிறுமி நட்பாக பேசுவாள். அந்த சிறுமிக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக அழைத்துச் சென்று, போதை பழக்கத்தை ஏற்படுத்தினார் கலைச்செல்வி.

திருப்பூரில் சிறுமியை அடைத்து வைத்து, பாலியல் தொழிலிலும் சிறுமியை ஈடுபடுத்தி உள்ளார். இதில், குமுதவல்லி 36, கல்பனா 32, சந்தியா 36, பிரதாப் 29, சிவகுமார் 36, மணி 36 ஆகியோருக்கும் கூட்டு இருந்துள்ளது. இந்நிலையில், மகளை காணோம் என்று சிறுமியின் பெற்றோர் கரூர் மகளிர் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். அப்போது கலைச்செல்வி கும்பல்தான் கடத்தி உள்ளதாகவும் குற்றஞ்சாட்டி இருந்தனர்.
அப்போது, மேற்கண்ட 7 பேரும் போலீசில் சிக்கினர்.. இவர்களை போக்சோவில் கைது செய்து, கரூர் மகிளா கோர்ட்டிலும் வழக்கு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி சசிகலா, சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சரண்யா என்கிற கலைச்செல்வி, குமுதவல்லி, கல்பனா ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், சிவக்குமார் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் வழங்கி அதிரடியாக தீர்ப்பளித்தார் .
கைதாகி இருந்த, சந்தானமேரி, பிரதாப் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மேலும், சரண்யா என்கின்ற கலைச்செல்விக்கு ரூபாய் ஒரு லட்சத்து 60 ஆயிரம் அபராதமும் குமுதவல்லி, கல்பனா மணி ஆகியோருக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரம் அபராதமும், சிவகுமாருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
ஒரே வழக்கில் 3 பெண்களுக்கு ஆயுளும், ஒரு ஆணுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் பல லட்சம் ரூபாய் அபராதமும் என அதிரடியாக வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு, கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications