ஆசிரியர், மகள் விஷம் குடித்து உயிரிழப்பு.. தீவிர சிகிச்சையில் மனைவி.. கரூர் ஷாக்.. என்ன காரணம்?
கரூர்: குடும்ப பிரச்சனை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷம் குடித்ததில், இருவர் உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கரூர் காந்தி கிராமம் கிழக்கு போக்குவரத்து நகரை சேர்ந்த முகமது பரீத் என்பவர், கரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் மனைவி நஸ்ரீன்பானு. இவர்களுக்கு 17 வயதில் மகளும், 9 வயதில் மகனும் உள்ளனர். மகள் தனியார் பள்ளியில் பி ளஸ் 1 படித்து வந்தார்.

இதனிடையே, கரூர் போக்குவரத்து நகரில் முகமதுபரீத், புதிதாக வீடு வாங்கியதில் கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், முகமதுபரீத் கடும் மனஉளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில் நேற்று, முகமது பரீத், மந்திரித்த தண்ணீர் எனக்கூறி, மனைவி மற்றும் மகளுக்கு தண்ணீரில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு அவரும் அருந்தியுள்ளார். மேலும், இதுகுறித்து அவரது உறவினர் ஒருவருக்கு ஃபோன் செய்து கூறியுள்ளார். இதையடுத்து அங்கு வந்த உறவினர்கள், 3 பேரையும் மீட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், மகள் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். மற்ற இருவரையும் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரும் வழியில் முகமது பரீத் உயிரிழந்தார்.
மனைவி நஸ்ரின் பானு தொடர்ந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சையில் உள்ளார். மகனுக்கு விஷம் கொடுக்காததால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். மேலும், இந்த சம்பவம் குறித்து தான்தோன்றி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கரூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நபர்கள் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எந்தப் பிரச்சினைக்கும் தீர்வாகாது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications