அப்படி என்னங்க பண்ணிட்டாரு அவரு.. என்ன நடக்குது இந்த நாட்டுல.. கதறி கேட்ட முகிலன் மனைவி பூங்கொடி
முகிலன் என்ன தவறு செய்து விட்டார் என்று அவரது மனைவி பூங்கொடி கேள்வி எழுப்பி உள்ளார்
Recommended Video

கரூர்: "கொலை, கொள்ளையடிச்சவங்களை எல்லாம் விட்டுட்டாங்க.. உங்களுக்காக போராடினவரை இப்படி பண்றாங்களே இது சரியா" என்று முகிலன் மனைவி பூங்கொடி அழுகை வெடித்து கேள்வி எழுப்பி உள்ளார்.
போராளி முகிலனை நேற்று கரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்பது உத்தரவு. அதன்படி நடுராத்திரி நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பிறகு திருச்சி ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது, முகிலனை வீடியோ எடுக்க வந்த செய்தியாளர்கள் பேரிகேட் போட்டு தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அங்கு போலீசாருக்கும், செய்தியாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முகிலன் மனைவி பூங்கொடி:
''ஸ்டெர்லைட் தொடர்பான ஆதாரங்களை அவரிடமிருந்து வாங்குவதற்காக அவரை கடத்தி இருட்டு அறையில் அடைச்சி வச்சிருக்காங்க. நாயை விட்டு கடிக்க விட்டிருக்காங்க. சித்திரவதை பண்ணிருக்காங்க. யாருடைய தூண்டுதலின்பேரில் தான் இது நடந்தது. ஆனால் யார் என்று தெரியவில்லை. முதலுதவி சிகிச்சை கூட செய்யவில்லை. அப்படி என்னங்க அவர் தப்பு செய்துட்டாரு?
கொலை செய்துட்டு, கொள்ளையடித்தவர்களை எல்லாம் விட்டுடறாங்க. அவரை மாதிரி இனி யாருமே போராட்டத்திற்கு வரக்கூடாது, என்னைகூட அவர்கிட்ட பேச அனுமதிக்கவில்லை. 30, 40 போலீஸ்காரங்க எங்களை பேச விடாம தடுக்கறாங்க.
இரவோடு இரவா இப்படி கரூருக்கு கூட்டி வந்துள்ளனர். இப்போ திரும்பவும் காலைல 10 மணிக்கு எழும்பூர் கோர்ட்ல ஆஜராகணும்னு உத்தரவு இருக்கு. கொஞ்சம் கூட ஓய்வு தரல. மக்களுக்காக போராடியது ஒரு பெரிய குற்றமா? எந்த நாட்டுல நாம இருக்கோம்? என்னங்க நடக்குது இந்த நாட்டுல?" என்று கண்ணீர் மல்க கேள்வி எழுப்பினார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications