ரூ.100 கோடி நில அபகரிப்பு: தப்பி ஓடிய அதிமுக மாஜி அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்- கைது செய்ய போலீஸ் வலை!
கரூர்: ரூ100 கோடி நிலத்தை அபகரித்த புகாரில் தப்பி ஓடி தலைமறைவான அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர். எம்.ஆர்.விஜபாஸ்கர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து போலீசாரின் தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரூர்- மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர், போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அதில், வெள்ளியணை பிரகாஷ் மகள் ஷோபனா, செட்டில்மென்ட் மூலம் தமது சொத்தை கிரையம் செய்ய சார்பதிவாளர் அலுவலகம் வந்திருந்தார். ஷோபனாவுடன் ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ் என 4 பேரும் சார்பதிவாளர் அலுவலகம் வந்தனர். ஆனால் சொத்து வெள்ளியணை சார்பதிவகத்துக்குட்பட்டது; அசல் ஆவணமும் கொண்டுவரவில்லை. இதனால் பத்திரப் பதிவு செய்யாமல் நிலுவையில் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் அசல் ஆவணம் காணவில்லை என சென்னை வில்லிவாக்கம் காவல்நிலையம் கொடுத்த சிஎஸ்ஆர் நகல் என்னிடம் கொடுக்கப்பட்டது. ஷோபனா தரப்பில் யுவராஜ், பிரவீன் இதனை கொடுத்தனர். வெள்ளியணை சார்பதிவக அலுவலக மதிப்பு அறிக்கையுடன் கடந்த மே 10-ந் தேதி இந்த சொத்து கிரையம் செய்யப்பட்டது. ரூ100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலம் இது.
ஆனால் ஷோபனாவின் தந்தை பிரகாஷோ, போலி சான்றிதழ்கள் கொடுத்து மோசடியாக பத்திரம் பதிவு செய்துள்ளதாக புகார் மனுவை மறுநாளே என்னிடம் கொடுத்தார். அதில், தோரணக்கல்பட்டி- குன்னம்பட்டியில் தமக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர் எனவும் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக கரூர் மாவட்ட பதிவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதில் சென்னை வில்லிவாக்கம் காவல்நிலையத்தில் அசல் ஆவணம் காணவில்லை என சான்றிதழ் தரவில்லை என தெரியவந்தது. ஆகையால் போலி சான்றிதழ் கொடுத்துதான் பத்திரம் பதிவு செய்தது உறுதியானது. இதனால் கரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். தற்போது எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. எனக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும் என கோரியிருந்தார்.
இதனால் கரூர் போலீசார் ஷோபனா, யுவராஜ், பிரவீன் உள்ளிட்ட மொத்தம் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அத்துடன் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தாமும் கைது செய்யப்படலாம் என்பதால் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமறைவாகிவிட்டார். மேலும் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டும் எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை முதன்மை அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் தள்ளுபடி செய்தார்.
இதனையடுத்து எம்.ஆர். விஜயபாஸ்கரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். வட இந்திய மாநிலங்களில் எம்.ஆர். விஜயபாஸ்கர் பதுங்கி இருக்கலாம் என்பதால் அங்கும் தனிப்படை போலீசார் விரைந்துள்ளனராம்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications