கரூர் மணல் குவாரியில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை.. சிக்கப்போவது யார்?

Subscribe to Oneindia Tamil

கரூர்: மல்லம்பாளையத்தில் உள்ள மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். மணல் குவாரியில் இருந்து அள்ளப்பட்ட மணலின் அளவு குறித்து அதிகாரிகள் கணக்கிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றி வருகின்றனர். கடந்த மாதம் மணல் குவாரி, மணல் கொள்ளை, சட்டவிரோத சுரங்க முறைகேடு உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர்.

Enforcement department raided at sand quarry in Karur District

சென்னை, திண்டுக்கல், திருச்சி, கரூர், திருச்சி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம், தி.மலை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் விளாத்திகுளத்தில் ஆகிய ஊர்களில் சோதனை நடை பெற்றது.

கடந்த மாதம் 12ஆம் தினம் ரியல் எஸ்டேஸ் பிசினஸ் செய்யும் சண்முகம் என்பவருக்கு சொந்தமான வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ரியல் எஸ்டேட் தொழிலில் சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக வரப்பட்ட புகார்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சென்னை தியாகராய நகரில் உள்ள விஜய் அபார்ட்மெண்ட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். திருச்சி, தஞ்சாவூரிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர்.

Enforcement department raided at sand quarry in Karur District

இந்த நிலையில் இன்றைய தினம் கரூர் அருகே மல்லம்பாளையத்தில் உள்ள அரசு மணல் குவாரிக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தொழில்நுட்ப அதிகாரிகளுடன் வந்திருக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள், மணல் எடுக்கப்பட்ட அளவு குறித்து கணக்கிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+