உதயநிதி சொன்ன நீட் தேர்வு ரகசியம் என்ன தெரியுமா? கையில் என்ன கருப்பா? கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலகல
கரூர் : கரூரில் கருத்துப் போன வெள்ளி கொலுசுகளை பொதுமக்களிடம் காட்டி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், உதயநிதி சொன்ன நீட் தேர்வு ரகசியம் என்ன தெரியுமா என கேள்வி எழுப்பியதோடு அதற்கு பதிலும் அளித்து பிரச்சாரத்தை கலகலப்பூட்டினார்.
Recommended Video
கரூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் நகரமைப்பு தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், தொடர்ந்து 10 வருடம் ஆட்சியில் இருந்த நிலையில் ஒரு மாற்றம் வேண்டுமென்று புதிய வாக்காளர்கள் போட்ட வாக்குகளால் தற்போதைய திமுக அரசு ஆட்சி அமைத்துள்ளது. 3 சதவிகித வாக்குகள் வித்யாசத்தில் ஆட்சி அமைத்து தற்போது மக்களுக்கு பணம் கொடுத்தால் வாக்குகள் வாங்கி விடலாம் என்று தேர்தல் வியூகத்தில் கையாள்கின்றனர் என்றார்.

ஓட்டுக்கு பணம்
ஆளும் கட்சியின் பணம் கொடுத்தால் வாங்கி கொண்டு இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்ற விஜயபாஸ்கர், பொங்கலுக்கு ரூபாய் ஆயிரம் கொடுத்த முன்னாள் முதல்வர், சென்ற ஆண்டு 2 ஆயிரத்து 500 கொடுத்தார். ஆனால் தற்போதைய திமுக அரசு வெறும் 100 கூட கொடுக்கவில்லை, ஆனால் அன்று உதயநிதி மற்றும் கனிமொழி ஆகியோர்கள் ரூபாய் 5 ஆயிரம் தர வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்கள். ஆனால், தற்போது எதையும் செய்யவில்லை என்றார்.

உதயநிதி பிரச்சாரம்
இந்த ஊரில் ஒரு மந்திரி இருக்கின்றார். அவர் ஏற்கனவே அதிமுக விலும் இருந்தவர், அரவக்குறிச்சி தொகுதியில் எம்.எல்.ஏ வாக நிற்கும் போது ஜெயித்த பிறகு 25 ஆயிரம் நபர்களுக்கு 2 செண்ட் நிலம் தருவேன் என்று சொன்னார். ஆனால் பின்னர் எதுவும் தரவில்லை, இங்கே தற்போது அமைச்சராக இருந்தும் ஆள் இல்லை, கொள்ளையடிப்பதற்கு கோவைக்கு சென்று விட்டார். ஆகவே இன்று தமிழக முதல்வரின் மகனும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கரூர் வந்து பிரச்சாரம் செய்துள்ளார்.

நீட் தேர்வு ரகசியம்
அப்போது நீட் தேர்வு ரத்து ரகசியம் என்ன என்று இங்கு சொல்கின்றேன் என்று கூறி விட்டு, நீட் தேர்வு ரத்து என்னவென்றால் கடைசி வரை போராடுவது தான் என்று கூறி விட்டு சென்றுள்ளார். இந்த பதிலை உதயநிதி சொன்னதற்கு சொல்லாமல் சென்று இருக்கலாம் என்று கூறி உதயநிதி ஸ்டாலினை கிண்டல் அடித்து பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர், ஏற்கனவே மக்கள் ஆங்காங்கே பொங்கல் வெல்லத்திற்கு பதில் கிரீஸ் டப்பா கொடுத்ததாகவும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டினார்.

கருத்த வெள்ளிக் கொலுசு
கடந்த சட்டசபை தேர்தலில் என்னை எதிர்த்து போட்டியிட்டு ஜெயித்த செந்தில்பாலாஜி மக்களுக்கு கொடுத்த வெள்ளிக்கொலுசு என காட்டி, அது வெள்ளி அல்ல என்றும் அது கல் வெள்ளி அப்போதே, கருத்திருச்சு, ஆகவே குடும்பத்திற்கு 5 ஆயிரம் என்று கூறியதையும் சுட்டிக்காட்டிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நீங்கள் வாக்களிக்கும் போது இந்த வெள்ளிக்கொலுசை நினைத்து பார்த்து வாக்களியுங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications