தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சிதான் அமைய வேண்டும்... பிரச்சாரத்தில் வைகோ ஆவேசம்!!
கரூர்: தமிழகத்தில் சுயமரியாதை ஆட்சி வேண்டும் என்றால் அது ஸ்டாலின் தலைமையில் தான் அமைய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட தளவாபாளையம் பகுதியில் ம.தி.மு.க கட்சியின் பொது செயலாளர் வைகோ பிரச்சாரம் செய்தார். தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து வாக்கு சேகரித்த வைகோ, தமிழக உரிமைகளை,வாழ்வாதாரத்தை பெற சுயமரியாதை ஆட்சி அமைய தி.மு.க. கட்சியின் தலைவர் ஸ்டாலின் ஆட்சி அமைய வேண்டும் என்றார்.
செல்விக்கு எதுக்கு இந்த வேலை.. இப்போ மாட்டிக் கொண்டு முழிக்கிறார்!
மேலும் ஆசியா கண்டத்திலேயே நெல் களஞ்சியம் நிறைந்த பகுதி தமிழகம். மத்திய அரசு தமிழகத்தை பசி, பஞ்சம் வரவேண்டும் என்பதற்காக காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு திட்டம் கொண்டு வந்துள்ளது.
பொள்ளாச்சி பாலியல் கொடுமைக்கு இது வரை 300 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இனி வாழமுடியுமா? அதேபோல் வறுமையின் காரணமாக தமிழகத்தில் குழந்தைகள் விற்பனை நடைபெற்று கொண்டிருக்கிறது. இவ்வாறு வைகோ பேசினார்.