கோவை தான் டார்கெட்..கரூரை கண்டுக்கவில்லையா செந்தில் பாலாஜி? திமுகவினரை அதிமுகவுக்கு தூக்கிய எம்ஆர்வி
கரூர்: அமைச்சர் பொறுப்பில் இல்லாவிட்டாலும் கோவை மண்டல பொறுப்பாளராக இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த முறை கொங்கு மண்டலத்தை தட்டித் தூக்க வேண்டும் என தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார். ஆனால் கோவையில் காட்டும் ஆர்வத்தை கரூரில் காட்டவில்லை என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் சொந்த மாவட்டத்தில் இருக்கும் நிர்வாகிகளை திமுகவிலிருந்து அதிமுகவுக்கு தூக்கி இருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
தமிழக அளவில் பல கட்சிகள் இருந்தாலும் ஆண்டதும் ஆள்வதும் ஆளப்போவதும் இரண்டே இரண்டு திராவிட கட்சிகள் தான். அது திமுக அதிமுக மட்டும் தான். 60 ஆண்டு கால தமிழக அரசியல் அதைத்தான் சொல்லி இருக்கிறது. மாவட்ட அளவிலும் இதே நிலைதான் நீடிக்கிறது.
துரைமுருகன், கேஎன் நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் என ஒவ்வொரு மாவட்டத்தில் ஒரு முக்கிய 'தலை' மாவட்ட அரசியலிலும், மாநில அரசியலிலும் ஆதிக்கம் செலுத்தும். அதிமுகவிலும் அப்படித்தான் இருக்கிறது.

தமிழக அரசியல்
திண்டுக்கல் சீனிவாசன், சி. விஜயபாஸ்கர், சி.வி. சண்முகம், ஜெயக்குமார், என அவரவர் தங்கள் மாவட்டங்களில் அதிமுகவின் தனிப்பெரும் செல்வாக்கோடு வலம் வருகிறார்கள். ஒரு சில மாவட்டங்களில் திமுக மாவட்ட செயலாளர்கள் முழுமையாக கோலோச்சுவார்கள். ஒரு சில மாவட்டங்களில் அதிமுகவினர் வலுவாக இருப்பார்கள். சில மாவட்டங்களில் மட்டும்தான் நேரடி போட்டி இருக்கும். உதாரணத்திற்கு மதுரையில் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா என ஒரு டீம் இருந்தால், திமுகவில் பி.டி.ஆர். மூர்த்தி என எதிர் டீம் வலுவாக இருக்கும்.
செந்தில் பாலாஜி
அப்படித்தான் கரூரிலும். கடந்த காலத்தில் அதிமுகவில் இருந்த செந்தில் பாலாஜி திமுகவுக்கு தாவினார். உடனடியாக அவருக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியும் சில நாட்களில் மாவட்ட செயலாளர் பதவியும் அளிக்கப்பட்டது. இதனால் அதிமுகவில் ஒன்றாக அரசியல் செய்த செந்தில் பாலாஜியும் விஜயபாஸ்கரும் எதிர் எதிர் துருவங்களாக மாறினர். கரூர் என்றாலே அரசியல் அதிரடிகளுக்கு பஞ்சமிருக்காத வகையில் இருவரும் பார்த்துக் கொண்டனர்.
எம்ஆர் விஜயபாஸ்கர்
செந்தில் பாலாஜி அதிரடி அரசியல் என்றால், விஜயபாஸ்கர் நிதானமான, கவனமான அரசியல் செய்பவர். இதனால் இரு தரப்பிற்குமே ஆதரவாளர் வட்டம் அதிகம். இந்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜயபாஸ்கர், செந்தில் பாலாஜியிடம் தோல்வி அடைந்தார். தமிழ்நாடு முழுவதுமே அந்தத் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அதே நேரத்தில் செந்தில் பாலாஜி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை விஜயபாஸ்கர் தரப்பு சுமத்தியது. திமுக தலைமையின் கவனத்தைப் பெற்ற செந்தில் பாலாஜி கோவை மண்டலப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
அதிமுக நகர்வு
அதற்குப் பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக வெற்றி வியூகம் அமைத்தது செந்தில் பாலாஜி. இதற்கிடையே வழக்கு காரணமாகச் சிறை சென்ற நிலையில் பின்னர் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவியும் போய்விட்டது. தற்போது எம்எல்ஏவாக இருந்தாலும் திமுக கோவை மண்டலப் பொறுப்பாளராக செந்தில் பாலாஜி இருக்கிறார். இந்நிலையில், அவரது கவனம் முழுக்கக் கோவையில் தான் இருக்கிறது. கரூரில் இல்லை என்ற அதிருப்தியை அவரது ஆதரவாளர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
திமுக நிர்வாகிகள்
தற்போது கரூரில் திமுக முப்பெரும் விழா நடக்க இருக்கும் நிலையில் அதற்காக மட்டும்தான் செந்தில் பாலாஜி கரூரில் முகாமிட்டிருக்கிறார். மற்றபடி கோவை, சென்னை எனத்தான் அரசியல் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், அவரது தம்பியின் ஆதிக்கம் மறைமுகமாக திமுகவில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால் திமுக நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இதை தெரிந்துகொண்ட விஜயபாஸ்கர் தரப்பு திமுக நிர்வாகிகளை அதிமுகவுக்கு இழுக்கத் தொடங்கியுள்ளது.
திமுக அதிர்ச்சி
அந்த வகையில் தான் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி புலியூர் பேரூராட்சி திமுக 11வது வார்டு பிரதிநிதி எஸ்.மனோகரன், 5வது வார்டு பிரதிநிதி சுரேஷ் அவர்களும், 14வது வார்டு பிரதிநிதி மணி ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து இருக்கின்றனர். மேலும் அவர்கள் மூலமாக மேலும் ஒன்றிய, நகர் பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகளை அதிமுகவுக்கு இழுக்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது. இதனால் செந்தில் பாலாஜி தரப்பு அதிர்ச்சி அடைந்ததாகவும் சொல்கின்றனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications