விஜய்க்கு அடிமேல் அடி! கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. பிரசார வாகனத்த எடுத்து சென்று சிபிஐ அதிகாரிகள் ஆய்வு
சென்னை: விஜய்யின் பிரசார வாகனத்தை சிபிஐ அதிகாரிகள் கரூரில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு வைத்து விஜய்யின் பிரசார வாகனத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். முன்னதாக விஜய்யின் பிரசார வாகனத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும், இதனால் பிரசார வாகனத்தை விஜய், இனி நீதிமன்றம் சென்றுதான் மீட்க முடியும் எனவும் தகவல் வெளியானது. இதற்கு தவெகவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
வரும் 12 ஆம் தேதி விஜய் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தநிலையில் இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகன் பட சென்சார் விவகாரம், விஜய்க்கு சிபிஐ சம்மன், தற்போது வாகனத்தை எடுத்து சென்றது என அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் விஜய்க்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

கரூர் கூட்டநெரிசல் வழக்கு
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தகள் என 41 பேர் பலியானார்கள். மேலும் 110 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கை தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் ஏற்கனவே சி.பி.ஐ. அதிகாரிகள் சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் 2 நாட்கள் ஆய்வு செய்தனர். மேலும் கடந்த மாதம் 19-ந் தேதி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூத்த ஆலோசகர் அனுஜ் திவாரி தலைமையிலான குழுவினரும், தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்தின் அதிகாரிகளும் அங்கு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
விஜய்யின் பிரசார வாகனம்
நேற்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் பிரசாரம் நடைபெற்ற இடத்தில் ஆய்வு செய்தனர். விஜய்க்கு நாளை மறுநாள் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியிருக்கும் நிலையில், இன்று விஜய் பிரசார வாகனத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
சென்னையில் இருந்து கரூர் சிபிஐ அலுவலகத்திற்கு பேருந்து கொண்டு வரப்பட்ட நிலையில், அந்த பேருந்தில் ஆய்வு நடைபெறுகிறது. பிரசார வாகன டிரைவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விஜய்யின் பிரசார வாகனத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தகவல் பரவியது. சிபிஐ பறிமுதல் செய்துள்ளதால் விஜய், இனி நீதிமன்றம் சென்றுதான் மீட்க முடியும் என கூறப்பட்டது.
அடுத்தடுத்து விழும் அடி
இந்த நிலையில் தவெகவினர் இதனை மறுத்துள்ளனர். கரூரில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள விஜய்யின் பிரசார வாகனத்தில் அதிகாரிகள் ஆய்வு தான் செய்து வருகிறார்கள் என்று கூறியுள்ளனர். ஏற்கனவே கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் வரும் 12 ஆம் தேதி விஜய் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தது.
இந்த நிலையில் அவரது பிரசார வாகனத்தில் ஆய்வு செய்து வருவதும், அவரது டிரைவரிடம் விசாரணை நடத்துவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சென்சார் சான்றிதழ் வழங்கப்படாததால் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் விஜய்க்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
-
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
காங்கிரஸில் இருந்து சஸ்பெண்ட்! அடுத்த நாளே விஜய்யை சந்தித்த பிடி செல்வம்! தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications