பாஜக பாலிடிக்ஸான விஜயின் பனையூர் அரசியல்! திமுகவிடம் அதிக சீட் கேட்போம்! மார்க்சிஸ்ட் சண்முகம் பளீர்
சென்னை: விஜய் அரசியலை கரூர் சம்பவத்திற்கு முன், பின் என பிரித்துக் கொள்ளலாம் எனவும், கொள்கை எதிரியான பாஜகவுக்கு எதிராக அதிகமாக பேசுவதில்லை என கூறியுள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சண்முகம். மேலும், திமுகவிடம் அதிக இடங்களை கேட்டு பெறுவோம் எனவும், கேட்கும் இடத்தில் நாங்கள் இருக்கிறோம், கொடுக்கும் இடத்தில் அவர்கள் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் பகுதியில் அமைந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்," பாராளுமன்ற கூட்டத் தொடரில் பாஜக அரசு மசோதா ஒப்புதலுக்கு கொண்டுவந்துள்ளது. குறிப்பாக 100 நாள் வேலை உத்தரவாத சட்டத்தை, வேலைவாய்ப்பு என்று மாற்றுகின்றனர்.

மார்க்சிஸ்ட் சண்முகம்
மகாத்மா காந்தி மீது உள்ள வெறுப்பு காரணமாக அந்தத் திட்டத்திற்கு பூஜ்ஜியபாபு என்று பெயரை மாற்றுக்கின்றனர். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பு ஏற்கத்தக்கதல்ல. சட்டம், ஒழுங்கு மாநில அரசின் கையில் இருக்கும்போது, நீதிபதிகள் மத்திய படை, தொழில் பாதுகாப்பு படையை பயன்படுத்துவது ஃபேசனாகிவிட்டது. இது அத்துமீறிய செயல். நீதிபதிகள் வரம்பு மீறி பேசிவருவது அரசுக்கும் நீதிமன்றத்திற்கும் மோதல் போக்கை உண்டாக்குகிறது.
கேரளா உள்ளாட்சி தேர்தல்
இது வன்மையான கண்டனத்துக்குரியது. நீதிபதி RSS கொள்கையை தனது தீர்ப்பில் வெளிப்படுத்துகிறார். கேரளா உள்ளாட்சி தேர்தலில் ஒரே ஒரு மாநகராட்சியில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஆனால், ஊடகங்களில் பாஜகவை கொண்டாடி வருகின்றனர்.
விஜய் அரசியல்
விஜய் அரசியலை கரூர் சம்பவத்திற்கு முன், பின் என பிரித்துக் கொள்ளலாம். திமுக அரசியல் எதிரி என்றும், பாஜக கொள்கை எதிரி என்றும் பேசிய விஜய், தற்போது பாஜகவுக்கு எதிராக அதிகமாக பேசுவதில்லை. பாண்டிச்சேரி கூட்டத்திலும் அது வெளிப்பட்டது.
திமுக கூட்டணி
திமுக கூட்டணியில் தான் தற்போதும் இருக்கிறோம். ஆனால் மக்கள் நலம் சார்ந்த பிரச்சனைகளை பேசாமல் இருந்ததில்லை. கூட்டணி சார்ந்த விஷயங்களில் திமுகவிடம் அதிக இடங்களை பெறுவதில் தெளிவாக இருக்கிறோம். கேட்கும் இடத்தில் நாங்கள் இருக்கிறோம் கொடுக்கும் இடத்தில் அவர்கள் இருக்கின்றனர்" என்றார்.












Click it and Unblock the Notifications