கரூர் கூட்டத்தில் என்ன நடந்தது? தவெக சேலம் மாவட்ட செயலாளரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை
கரூர்: தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சேலம் மத்திய மாவட்ட தவெக செயலாளர் பார்த்திபன், இன்று SIT விசாரணைக்கு ஆஜரானார்.
கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி, கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கடுமையான நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற பரிந்துரையின் பேரில் அஸ்ரா கார்க் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு கரூரில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கடந்த 5 ஆம் தேதி முதல் கரூரில் சம்பவம் நடைபெற்ற பகுதியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் நெரிசல் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து சம்பவம் நடந்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் தவெக நிர்வாகிகளிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் சேலம் மாவட்ட தவெக மத்திய மாவட்டச் செயலாளர் பார்த்திபனை விசாரிக்கும் வகையில் ஆய்வுக் குழுவினர் கடந்த இரு தினங்களுக்கு முன் சம்மன் அவருக்கு அனுப்பினர்.
முன்னதாக இந்தச் சம்பவம் தொடர்பாக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் பார்த்திபனிடம் இன்று சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொண்டது.
சிறப்பு புலனாய்வுக்குழு, பார்த்திபனிடம் கரூர் சம்பவத்தின் போது கூட்ட நிர்வாகத்தில் நடந்தது குறித்து விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையின் போது, பிரச்சார கூட்டத்தின் ஏற்பாடுகள், கூட்ட நிர்வாகம், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.ஐ.டி குழு அதிகாரிகள் கேள்விகள் எழுப்பினர்.அவர், சம்பவத்தின் போது நடந்த நிகழ்வுகளை விவரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரசார கூட்டத்திற்கு சவுண்ட் சிஸ்டம் அமைத்த ஆடியோ இன்ஜினியர்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப குழுவினரும் SIT முன் ஆஜராகினர். அவர்கள், கூட்டத்தின் ஆடியோ ஏற்பாடுகள், கூட்ட அளவு, சம்பவத்தின் போது ஏற்பட்ட குழப்பங்கள் குறித்த கேள்விகளுக்கு விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்











Click it and Unblock the Notifications