கரூரில் ராத்திரி நேரம்.. மெயின்ரோட்டில்.. அது என்னது.. மிரண்ட வாகன ஓட்டிகள்
கரூர்: கரூர் மக்களுக்கு இரவு நேரத்தில் பல்பு காட்டிய பாம்பு .. சுமார் இரண்டு மணி நேரம் ஒரே இடத்தில் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் நகரில், சுங்ககேட் அடுத்துள்ள தெரசா கார்னர் பகுதியில், சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் பேரிகார்டு பகுதியில் 4 1/2 அடி நீளமுள்ள விரியன் வகை பாம்பு, எதையோ உண்டுவிட்டு அசைய முடியாமல் ஒரே இடத்தில் படுத்து இருந்துள்ளது.

இந்நிலையில் இரு சக்கர வாகனங்களில் கரூரிலிருந்து காந்தி கிராமம் மற்றும் சென்ற வாகன ஓட்டிகள், வாகனத்தின் முகப்பு விளக்குகளை டிம் அண்ட் ப்ரைட் செய்து இயக்கிய போது, பாம்பில் பட்டு மிளிர்ந்துள்ளது.
இந்நிலையில் அங்கு உள்ள இளைஞர்கள் அருகில் சென்று பார்த்தபோது அசைய முடியாமல் அப்படியே ஒரே இடத்தில் இருந்து உள்ளதை பார்த்து கரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கரூர் தீயணைப்பு வீரர்கள் இந்த பாம்பினை பிடித்து காட்டுப்பகுதிக்குள் விட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் கரூர் நகரின் மையப்பகுதியான தெரசா கார்னரில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு நீடித்தது.












Click it and Unblock the Notifications